Wednesday 31 January 2018

மனத்துக்கண் மாசு

மனத்துக்கண் மாசு.
மனதுக் குள்ளே கடகட சப்தம்;
மௌனம் காப்பேன்  வாயைப் பூட்டி.
கனவுக் கன்னியர் நர்த்தனம் நெஞ்சில்
காமம் காப்பேன் ஊருக் கஞ்சி!
சினமும் வெறுப்பும் சிந்தை நிறைய;
சிரிப்பாய் மலரும் முகத்துப் பூச்சு!
அனைத்துக் கும்பேர் அறிவோ மாகில்

அதுதான் பொய்ம்மை ஒழுக்கம் என்பது!

No comments:

Post a Comment