Tuesday 5 June 2018

அருள் வாக்கு


அருள் வாக்கு
(திலகம்-1960)
பாரதப் புண்ணியப் போர்க்களத்தே-விறல்
     பார்த்தனை ஒத்தனர் இன்று மக்கள்!
சாரதியாய் வழி காட்டுகின்றார்-அறம்
     சாற்றிடும் வாசகம் தென்பு தரும்.
தெய்வ சுதந்திரம் கண்டிடுமுன்- நாம்
     தோளொடு தோளெனக் கூடியவர்.
உய்வதுண்டோ அவர் தம்மைச் செற்று?-சொந்த
     உடன்பிறந்தோர் நம் சுற்றமன்றோ?
தர்மம் உரைப்பவர் இராஜாஜி-அருள்
     தெய்விகக் கீதையின் வார்த்தை சொல்வார்
கர்மமியற்றுதல் நம் கடமை-அதில்
     காணும் விளைவினில் எண்ணமின்றி!

No comments:

Post a Comment