Thursday 13 October 2016

இனிய கதை

இனிய கதை
இனிய கதை ஒன்று கேளீரோ
     இன்ஷூரன்ஸ் எனும் புனித கதை;
கனிமொழி மனைவி மக்களுக்காகக்
     காதல் கணவன் சொன்ன கதை (இனிய கதை)
சோதனை இடையில் எது நிகழ்ந்தாலும்
     சொர்க்கம் அளிக்கும் தேவ கதை;
வேதனை நீங்கி வகையினில் உலகில்
     வாழத் தெரிந்தவர் சொன்ன கதை (இனிய கதை)
நாளையை எண்ணி நல்லவர் சொன்ன
     நம்பிக்கை தரும் அம்ருத கதை;
வேளையில் பொழுதில் வருவதை நோக்க
     வல்ல கதை அது த்யாக கதை (இனிய கதை)
(தஞ்சை ஆயுள் காப்பீட்டுக் கழக செய்தி மடல்-ஜனவரி 1964)

    




No comments:

Post a Comment