Monday 8 May 2023

பாரதி இடறிய காதல் கவிதை

 

பாரதி இடறிய காதல் கவிதை

 

 

தண்ணீர் எடுத்துவரத் தங்கக்குடமேந்தி, அசைந்தாடும் மயில் போல ஒசிந்து நடையிட்டு வருவாள் காதலி, நட்சத்திரம் போல ஜொலிக்கும் புன்னகை. அவளுக்கு முன்னாலே, கண்டவர் மனதில் தைக்கும்பொருட்டு, மலர்க்கணையைக் கையிலேந்தி மன்மதன் பாராக் கொடுத்துக்கொண்டு வருகிறான்.

 

பாரதி அவள் வருகைக்காகாக் காத்துக் கொண்டிருக்கிறான். காத்திருக்கும் தன் நிலையை வருணிக்கப் போகிறான். கிளுகிளுப்பாக ஏதாவது எழுதுவான் என்று நாமும் காத்திருக்கிறோம். ஊஹூம், வேறு modeக்கு மாறி விட்டான், சுதந்திரப் போராட்ட mode.

 

எப்ப்படிக் காத்திருக்கிறானாம்? அரசுச் சேவகர்கள், எப்படா சுதந்திரப் போராட்ட வீர்ர்கள் வருவார்கள்? லபக்கென்று அமுக்கிப் பிடிக்கலாம் என்று காத்திருப்பது போல் காத்திருக்கிறானாம்.

 

நீரெ டுத்து வருதற் கவள்மணி

                நித்தி லப்புன் னகைசுடர் வீசிடப்

போரெ டுத்து வருமதன் முன்செலப்

                போகும் வேளை யதற்குத் தினந்தொறும்

வேரெ டுத்துச் சுதந்திர நற்பயிர்

                வீழ்ந்தி டச்செய்தல் வேண்டிய மன்னர்தம்

சீரெ டுத்த புலையுயிர்ச் சாரர்கள்

                தேச பக்தர் வரவினைக் காத்தல்போல்…..

 

இடறி விட்டாய் பாரதி, சுதந்திரப் போராட்டத்துக்குள் நுழையாமல் ஒரு காதல் கவிதை எழுதத் தெரியாதா உனக்கு?

 

நொந்தபடியே கவிதையைத் தொடர்ந்து வாசிக்கிறோம்!

 

மீண்டெழுந்து விட்டாய் பாரதி! காதல் சுவை நனி சொட்டச் சொட்ட எழுதி விட்டாய்!

 

காத்தி ருந்தவள் போம்வழி முற்றிலும்

                கண்கள் பின்னழ கார்ந்து களித்திட

யாத்த தேருரு ளைப்படு மேழைதான்

                யாண்டு தேர்செலு மாங்கிழுப் புற்றெனக்

கோத்த சிந்தையோ டேகி யதில்மகிழ்

                கொண்டு நாள்கள் பலகழித் திட்டனன்;

பூத்த ஜோதி வதனம் திரும்புமேல்

                புலன ழிந்தொரு புத்துயி ரெய்துவேன்!

 

சபாஷ் பாண்டியா! காதற்கவிஞனாக வெற்றிக்கொடி நாட்டி விட்டாய்!!

No comments:

Post a Comment