வாழ்க்கையில் எனக்கிது இசைகிறது!
அஹம் ப்ரம்மாஸ்மி என்றார்கள்!
அதுதான் மோட்சம் என்றார்கள்!
வார்த்தை எனக்குப் புரிகிறது!
வாழ்க்கையில் அதுதான் கூடவில்லை!
தாமரை இலையின் தண்ணீராய்த்
தனித்திரு என்று சொன்னார்கள்!
வார்த்தை புரிந்து என்ன பயன்?
வழிதான் எதுவெனத் தெரியவில்லை!
ஆரவாரம் புறத்தெனினும்
அகத்துள் சாந்தி என்றார்கள்!
இதுவும் நன்கு புரிந்தாலும்
இயல்பில் நடைமுறைக்காகவிலை!
சரணாகதி என விட்டுவிடு!
சஞ்சலம் உனக்கிலை என்றார்கள்!
சத்தியம் இதுவெனப் புரிகிறது!
சாத்தியம் ஏனோ ஆகவிலை!
நல்லவனாக இருந்துவிடு!
நல்லது செய்திடு என்றார்கள்!
வாய்மை விளக்கம் புரிகிறது!
வாழ்க்கையில் எனக்கிது இசைகிறது!
No comments:
Post a Comment