Monday 14 November 2016

ஓதப் புறப்பட்டார் வேதத்தை!

ஓதப் புறப்பட்டார் வேதத்தை!
ஆயிரம் ஐந்நூற்றுக் கற்றைகள்-பே(ர்)
      ஆசையோ டடுக்கிப் பதுக்கினர்!
நாயகன் ஆணையைக் கேட்டதும்
      நடுங்கிக்    கலங்கித் துடித்தனர்!
தீயினில் ஆகுதி செய்தனர்;-சிலர்
      திருப்பதி உண்டியல் சேர்த்தனர்!
தூயநீர்க் கங்கை நீராட்டினர்;-சிலர்
      தூக்கி எறிந்தனர் குப்பையில்!
கள்ளப் பணத்துக்கு நாணியே
      கண்ணைப் புதைத்தவர் தேம்பினார்!
வள்ளலெனச் சிலர் மாறினர்!
      வாரி வழங்கினர் ஏழைக்கு!-மழை
வெள்ளத்திலே நனை ஆடுகள்-கண்டு
      வேதனை வார்த்தைகள் கொட்டினர்!
உள்ளத்தை விற்றிட்ட சாத்தான்கள்
      ஓதப் புறப்பட்டார் வேதத்தை!




      

No comments:

Post a Comment