Monday 15 August 2016

நாட்டுப்பற்று

நாட்டுப்பற்று
என்னாடு என்னுடைத்து என்றே தன்னுள்
எண்ணி மனம் மகிழ்ச்சியுறாத் தன்மையாளன்
பன்னாடு சுற்றியபின்,பிறந்த அந்தப்
பொன்னாட்டு மண்மிதிக்கப் பூரிப்பெய்தா
உள்ளம் செத்துணர்வோய்ந்து விட்ட பாவி
உண்டெனிலோ செல் அவனை உற்றுக்காண்க
உளம் உவந்து பாடிவிடப் பாணரில்லை,
எண்ணவொணாச்செல்வமெலாம் இருந்தபோதும்
எத்தனையோ பதவிகளை வகித்தபோதும்
செல்வாக்குப் பட்டமுடன் செல்வம் சேர்ந்தும்
சுயநலமே கருதிடுமப் பாவி வழ்வில்
சொல்லுபுகழ் செத்து உடல் சாகும்போது
சூனியமாய்ப் புழுதியுளே சென்றே வீழ்வான்
மண்தனிலே தோன்றியவன் மண்ணாய் மாய்வன்
மதிப்பின்றி இசையின்றிக் கவல்வோர் இன்றி!
மொழிபெயர்ப்புக் கவிதை1956
Like
Comment

No comments:

Post a Comment