Wednesday 3 August 2016

கன்னத்தில் அறைந்த காதல்

கன்னத்தில் அறைந்த காதல்
செம்பொன்னாம் நிற நங்கை;தெரிந்தவள்தான்; கண்டேன்.
“செளக்கியமா நீவிர் உமக்கென் வேண்டும் ?என்றாள்.
“உளம்” என்றேன்.”இருக்கிறீர்;தெரிகிறது.” என்றாள்.
உற்றவளை விழுங்கிவிட ஆசையினால் பார்த்தேன்.
கண்டுவிட்டாள்.”விஷயம் என்ன?காண்கின்றீர்?”என்றாள்.
காதலினால் நெஞ்சுருகப் “பிரேமை” எனச்சொன்னேன்.
“கண்ணாடி பிரேம்தானே? குறைந்தவிலை;புதிசு.
காந்தம்மா ஆப்டிகல்ஸில் வாங்கியது.” என்றாள்.
பஞ்சடியை.மெல்ல வைத்துச் சென்றாள் தன் வீட்டுள்.
பார்த்த கண்கள் ஆசையினால்”அன்னம்” எனச் சொன்னேன்.
இலையிட்டாள்;அன்னமிட்டாள்;அருந்துகிறபோதே
இன்னும் என்ன வேண்டுமென எழில்வாயால் கேட்டாள்.
’’நீர்” என்றேன் துணிச்சலுடன்.நாசமவள் போக!
நீரெடுத்து டம்ளரிலே அருகினிலே வைத்தாள்.
காதல்வெறி தாங்கவில்லை;துணிவோடு சொன்னேன்.
கன்னத்தில் ஒன்றென்று;பளீர் ஐயோ செத்தேன்!
(தினமணி சுடர்-10-5-1959)

No comments:

Post a Comment