Monday 8 August 2016

தத்வமஸி
எண்ணுகிற நான்
எண்ணத்தைப் பிடிக்க முனைந்தேன்.
பிடித்த தருணத்தில்
நானே எண்ணமாகி விட்டேன்.
காவலனே திருடன் ஆனால்
திருடனைப்பிடிக்க முடியுமா?
பழத்தைக் கொத்தித்தின்ற
பிப்பில மரத்துப் புள்
சாந்தநிலைப் பறவையை
அணுகி விட்டது. ஆச்சரியம்!
இதுவே அதுவாகி விட்டது!
மயில் குயிலாச்சுதடீ!
Like
Comment

No comments:

Post a Comment