Saturday 18 November 2017

சாரும்மா

சாரும்மா

(கொஞ்ச தினமே என்னுடன் கூட இருந்து கொள்ளை இன்பம் தந்த சாருக்குழந்தை அயல்நாட்டிலுள்ள சொந்த ஊருக்குச் செல்கிறது.)

ததக்காபிதக்கா நடைநடந்து
       தளிர்க்கரம்நீட்டி வருகிறது;
இதமாய்என்றன் தோள்சாய்ந்து
       இன்பம்கொள்ளை தருகிறது!
கதவின்பின்னால் மறைந்திருந்து
       கண்ணாமூச்சி விளையாட்டு!
பதமாய்ச்சோறு பாட்டிதரப்
       படங்கள்பார்த்து ரசிக்கிறது!

உம்மாச்சீபடம் காட்டிடிலோ
       உற்சாகத்தால் துள்ளிடுது!!
அம்மாவுடனே விண்ணேறி
       அயல்நாட்டுக்குச் செல்கிறது!
சும்மாஇருந்தேன்; சுகம்தந்து
       சுமையைவிட்டுச் செல்கிறது;
வெம்மை எனக்குத் தாங்காது;

       விரைவில் வந்திடு,சாரும்மா!

No comments:

Post a Comment