Monday 9 October 2017

ஒரு சாமான்யனின் கீதை-18

ஒரு சாமான்யனின் கீதை—18
 A few takeaways from the Gita
(ராஜாஜிக்குப் பணிவான நமஸ்காரங்கள்)
கீதையில் சொல்லப்பட்ட யோகத்தின் அங்கங்களாவன:
(1)  இந்திரியங்களைக் காத்தல், சுத்தமான வாழ்க்கை ,தினசரி ஆசாரம்; அதாவது உபாஸனை, வேலை, ஆகாரம், ஓய்வு தூக்கம் முதலியவைகளில் திட்டப்படி நடந்துகொள்வது.
(2)  சுபாவத்தாலோ ,சமுதாயத்தில் தான் அடைந்த ஸ்தானத்தினாலோ, சந்தர்ப்பத்தாலோ, தனக்கு ஏற்பட்ட கடமைகளைச் சுயநலப் பற்றின்றி, ஆனால், கண்ணுங்கருத்துமாய்ச் செய்து முடித்தல்.
(3)  ஜயாபஜயங்களை சமபுத்தியுடன் அனுபவித்தல், கஷ்டங்களைக் கண்டு மனங்கலங்காமல்,துயரமோ மகிழ்ச்சியோ எதுவரினும் தைரியமும் அமைதியும் இழக்காமலிருக்க மனதைப் பழக்கிக் கொள்ளுதல்
(4)  மனதை இடைவிடாமல்  காத்து, காமம், குரோதம், ஆசை என்ற வேகங்களுக்கு இடங்கொடாமல் இருத்தல்
(5)  இப்படி உள்ளும் புறமும் சுத்தமாய் வைத்து மனதை ஸ்திரப்படுத்திக் கொண்டு, அவ்வப்போது அத்யாத்ம தியானம் செய்தல்
(6)  பகவானிடம் பூரணமாய்ச் சரணாகதி புகுதல்.


No comments:

Post a Comment