Tuesday 5 December 2017

சரியா? தப்பா?

சரியா, தப்பா?
 Don’t say yes when you want to say No.-
இது ஒரு புத்தகத்தின் தலைப்பு. இது assertivenesss பற்றிய புத்தகம் என்கிறார்கள். காந்திஜி  இத்தகைய-மனதில் ஒன்று-வெளியில் ஒன்று என்ற நடத்தையை உண்மைக்குப் புறம்பானது என்று தெளிவுபடச் சொல்கிறார்.
காந்திஜி ஆசிரமத்தில்  11 நடத்தை விதிகள். அவற்றில் தலையாயது உண்மை-சத்தியம்.அன்றாட வாழ்வில், சின்ன சின்ன விஷயங்களில் கூட நாம் உண்மைக்கு மாறாக-பொய்யாக நடந்து கொள்ளும் அபாயம் இருக்கிறது என்பதை அவர் ஓர் உதாரணத்துடன் விளக்குகிறார்.
ஒரு நண்பர் காந்திஜியிடம் வந்தார். “ஒரு சொந்தப் பிரச்சினை; உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்” என்றார். காந்திஜி உடன் சம்மதிக்கவே இருவரும் ஒதுக்குப்புறமாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் அப்போது பரஸ்பர நண்பர் ஒருவர் அங்கு வந்து நின்று விட்டார் .”என்ன, நான் வந்து கலந்து கொள்வது உங்கள் பேச்சுக்கு இடைஞ்சலாக இருக்காதே?” என்று யதார்த்தமாகக் கேட்டார். அதற்கு நம் நண்பர் சொன்ன பதில் காந்திஜிக்கு அதிர்ச்சியாக இருந்தது. “அதெல்லாம் ஒண்ணுமில்லே! நீங்கள் தாராளமாக் கலந்துக்கலாம்!” நம்ம நண்பர் நயத்தக்க நாகரிகம் உடையவராக நினைத்துக்கொண்டு பேசினார். இது நாகரிகமே இல்லை. அதி-நாகரிகம்-அல்லது அநாகரிகம். நண்பர் என்ன சொல்லியிருக்கவேண்டும் என்கிறார் காந்திஜி? “ஆமாம்.கொஞ்சம் தனிப்பட்ட விஷயமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் வந்தால் எங்கள் பேச்சு தடைப்படும்” என்று சொல்லியிருக்க வேண்டும். சொல்லும் விதம் அவர் மனம் புண்படாதபடி இருக்க வேண்டும். வந்த நண்பர் பண்புடையவராக, இங்கிதம் தெரிந்தவராக இருந்தால், தவறாக நினைக்காமல் ஒதுங்கிக்கொண்டு விடுவார்.”.
இப்படி சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம் நாம் சின்ன பொய்களைச் சொல்லிக்கொண்டிருந்தால் நாம் சீக்கிரமே பொய்யொழுக்கதாரிகளின் தேசமாக மாறி விடுவோம் என்கிறார் காந்திஜி.
என்ன, இந்தக் கட்டுரை நன்றாயிருக்குதானே?

Yes or No?

No comments:

Post a Comment