Tuesday 4 July 2017

பணியின் மூலம் பேரானந்தம்(2)

என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

செய்தக்க அல்ல செயக்கெடும்-செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
                           திருக்குறள்
செய்யக்கூடாத ஒரு செயலைச் செய்வதாலும் அழிவு உண்டு. செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் அது அழிவைத் தரும்
                           ஸ்ரீசந்திரன் உரை.
தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத் தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத் தக்க செயல் புண்ணியச் செயல் எனப்படும்
                           பகவத்கீதை உரையில் பாரதியார்.
எல்லாரும் அவரவர் கடமையைச் செய்ய வேண்டும். இதில் கடமை என்ன என்று தீர்மானிப்பதில் முரண்பாடுகள் இருக்கக்கூடும். நாட்டுக்கு நாடு, பிரந்தியத்துக்குப் பிராந்தியம்,சமயத்துக்கு சமயம், ஏன்,காலத்துக்குக் காலம், சூழ்நிலைக்கு சூழ்நிலை, செய்யவேண்டியது எது செய்யத்தகாதது என்று விலக்கி வைக்கப்பட்ட செயல் எது என்பது பற்றிய நிலைப்பாடுகளில் முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் எல்லாருமே ஏற்றுக்கொள்ளக்கூடியது, அரரம் செய்ய வேண்டும்; மறத்தை விலக்க வேண்டும். எது அறம்? எது மறம்? பிறருக்குத் தீங்கு விளைவிப்பது மறம். நன்மை செய்வது அறம்
இந்த அடிப்படையில், நாம் அங்கம் வகிக்கும் சமுதாயத்தின் இலட்சியங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் ஏற்ப, நம்மை மேம்படுத்தக்கூடிய நல்ல செயல்களைச் செய்வது நமது கடமை என்று கொள்ளலாம்..




No comments:

Post a Comment