Friday 7 July 2017

ராமச்சந்திரன் கவிதை

.
ராமச்சந்திரன் கவிதை மூலம் என்ன சொல்ல நினைத்தேன் என்று தெளிவு படுத்தி விடுவது உத்தமம் என்று படுகிறது. மனித மனத்தின் சிக்கல் பற்றிய சிந்தனை.
நான் என் கருத்துதான் சரியானது என்பதிலும் நண்பன் கருத்து தவறானது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். அவனது கருத்தை மாற்றி அவனைத்”திருத்த வேண்டிய” கடமை என்ற சுமையை வலிந்து, தேவையின்றி ஏற்றுக்கொள்கிறேன். விளைவாக என் நட்பே அவனுக்கு சுமையாகி விடுகிறது.
அவன் தன் கருத்தை எடுத்து விளக்கப் பார்க்கிறான் .நான் கேட்கத் தயாராயில்லை. அடுத்த நிலையில் இங்கிதம் காரணமாக புன்னகைத்துப் பேசாமல் இருந்து விடுகிறான். நான் தொடர்ந்து nag செய்யவே. He simply swtches off! when I prove to be a nuisance, he starts avoiding me
Now it is a problem of ego for me .Because he is a friend, I feel possessive, and that I have a right to manipulate his views.
முடியாமல் போகவே, வெறுப்பு வருகிறது I am not able to distinguish between Ramachandran my friend and the views he holds. This happens,however rational I am, because of the emotions kindled by Ego.
I project my dissatisfaction with him on caste and origin. In the ultimate stage , I hate people who have birthmarks like him.(An extreme, exaggerated,instance.)
 ஆக,பொதுவான ஒரு வ்ஷயம் பற்றிய என் நண்பனின் கருத்து, என் அமைதியைக் குலைக்கிறது. என் நிம்மதி என்வசம் இல்லை!
ராமச்சந்திரன் என்ற பெயர், நகுலன் எழுதிய ஒரு கவிதையின் தாக்கத்தில் உருவானது.
மூல “ராமச்சந்திரன் கவிதை”யைப் படியுங்களேன்! முடியைப் பிய்த்துகொள்ள அதுவும் ஒரு காரணியாகலாம்!
அவன் வந்தான்.
ராமச்சந்திரன் என்றான்.
பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போனான்.
எந்த ராமச்சந்திரன் என்று
நானும் கேட்கவில்லை.
அவனும் சொல்லவில்லை.
, ..

,

No comments:

Post a Comment