Wednesday 26 July 2017

மென்மலரே! தூது சொல்! (உமா-அறுபதுகள் ஆரம்பத்தில்)

மென்மலரே! தூது சொல்!
(உமா-அறுபதுகள் ஆரம்பத்தில்)
மாலை இருளினில் மாய்கிறது-வட்ட
     வெண்ணில வின்னமும் தோன்றவிலை!
பாலைவன மனம் காய்கிறது!-அவள்
     பார்வையின் வெம்மையும் மாறவிலை!

மொட்டவிழ்ந்தே இதழ் வாசம் பரப்பியோர்
     மோகமெழுப்பிடும் மென்மலர் நீ!
கட்டவிழ்ந்தே மனம் காதல்வெறி கொளும்
     காவனச் சூழலில் தோன்றியவள்!

ஆவியொடே உடல் ஊடலுற்றே அந்த
     ஆவியை வாட்டிச் சுவைக்கிறதாம்!
பாவம்,அவன் உன்னில் பாதி என்றே அந்தப்
     பாவையிடம் சென்று தூது சொலு!

சுற்றிச் சுழல்கின்ற வட்டவிழிகளின்
     தண்மையை மாற்றிடும் சீற்றம் விட்டுச்
சற்றெனைக் கண்டிடும் ஓரத்து நோக்கினில்
     தெய்விகக் காதல் கனியவிடு!

அன்பெனும் ஓர் அமுதூற்றெடுத்தே வரும்
     ஆசை இதயத்தில் வற்றியதால்
தென்றலொடே சென்று தேனைப் பொழிந்தந்தத்

     தோகையைக் காதல் பேச விடு!

No comments:

Post a Comment