ஓதப் புறப்பட்டார் வேதத்தை!
ஆயிரம் ஐந்நூற்றுக் கற்றைகள்-பே(ர்)
ஆசையோ டடுக்கிப் பதுக்கினர்!
நாயகன் ஆணையைக் கேட்டதும்
நடுங்கிக் கலங்கித் துடித்தனர்!
தீயினில் ஆகுதி செய்தனர்;-சிலர்
திருப்பதி உண்டியல் சேர்த்தனர்!
தூயநீர்க் கங்கை நீராட்டினர்;-சிலர்
தூக்கி எறிந்தனர் குப்பையில்!
கள்ளப் பணத்துக்கு நாணியே
கண்ணைப் புதைத்தவர் தேம்பினார்!
வள்ளலெனச் சிலர் மாறினர்!
வாரி வழங்கினர் ஏழைக்கு!-மழை
வெள்ளத்திலே நனை ஆடுகள்-கண்டு
வேதனை வார்த்தைகள் கொட்டினர்!
உள்ளத்தை விற்றிட்ட சாத்தான்கள்
ஓதப் புறப்பட்டார் வேதத்தை!
No comments:
Post a Comment