Wednesday, 17 December 2025

ஓதப் புறப்பட்டார்..

 ஓதப் புறப்பட்டார் வேதத்தை!

ஆயிரம் ஐந்நூற்றுக் கற்றைகள்-பே(ர்)

ஆசையோ டடுக்கிப் பதுக்கினர்!

நாயகன் ஆணையைக் கேட்டதும்

நடுங்கிக் கலங்கித் துடித்தனர்!

தீயினில் ஆகுதி செய்தனர்;-சிலர்

திருப்பதி உண்டியல் சேர்த்தனர்!

தூயநீர்க் கங்கை நீராட்டினர்;-சிலர்

தூக்கி எறிந்தனர் குப்பையில்!

கள்ளப் பணத்துக்கு நாணியே

கண்ணைப் புதைத்தவர் தேம்பினார்!

வள்ளலெனச் சிலர் மாறினர்!

வாரி வழங்கினர் ஏழைக்கு!-மழை

வெள்ளத்திலே நனை ஆடுகள்-கண்டு

வேதனை வார்த்தைகள் கொட்டினர்!

உள்ளத்தை விற்றிட்ட சாத்தான்கள்

ஓதப் புறப்பட்டார் வேதத்தை!

 



No comments:

Post a Comment