Tuesday, 30 December 2025

பொறந்த ஊரை..

 பொறந்த ஊரை நெனச்சுப் பாத்து

பொறப்பட்டு வாங்க!

(கொத்தமங்கலம் சுப்புவின் பழைய பாடல் ஒன்றைத் தழுவி எழுதியது.)

பொறந்த ஊரை நெனைச்சுப் பாத்து

பொறப்பட்டு வாங்க!

மறந்து போன ஜனத்தையெல்லாம்

வந்து பாருங்க!

கூவத்தூரு சொகுசு எல்லாம்

கலெஞ்சு போச்சுங்க!

பாவப்பட்ட மக்களையும் 

பாக்க வாருங்க!

நேரத்திலே தேர்தல் வரும்

சீக்கிரம் வாங்க!

ஆரத்தியைக் கரெச்சு வெச்சுக்

காத்திருக்கோங்க!


No comments:

Post a Comment