Monday, 29 December 2025

பாதை ஒன்றில்..

 எப்படி நான் மறந்தேன்?




பாதை ஒன்றில் பரபரப்பாகப் பயணம் புறப்பட்டேன்! 

பாதி வழியில் திடுமெனநின்றேன்; எங்கே போகின்றேன்?

ஏதோ ஒன்றை நோக்கித்தானே  இவ்வழி நடக்கின்றேன்?

ஏதது என்பது ஞாபகம்இல்லை; எப்படி நான்மறந்தேன்?




வழியில் பலபல கோலகலங்கள்! வாண வெடிச்சப்தம்!

குழப்பக் குரல்கள் கூச்சல்நெரிசல் ஆங்காங் கிருக்கின்ற!!

விழவில் தவறிய குழந்தையைப்போலே அழுது தவிக்கின்றேன்!

“அழுகையை நிறுத்து; கையைப்பிடி”என ஆரிங் கழைப்பார்கள்?




வந்த வழியைத் திரும்பிப்பார்த்தால் கலக்கம் மலிகிறது!

எந்த இடத்தில் துவங்கியபயணம் என்பதும் மறந்தாச்சு!

சொந்த இடமென் றொன்றுஇருக்கணும்; அதுதான் தெரியவிலை!

நொந்து தவிக்கும் மனதுக்கமைதி எப்படிக் கிடைத்திடுமோ?


No comments:

Post a Comment