ஈனக்கும்பலே!
எல்லைகாக்கும் ராணுவத்தை
ஏசிப் பேசினோம்!
தொல்லைதரும் பகைவனது
தோளைத் தழுவினோம்!
நல்ல நாடு எதிரி நாடு
நாளும் கூவினோம்!
“இல்லை” என்று சாகசங்கள்
இழித்துப் பேசினோம்!
சீனத்தோடு தனித்துச் சென்று
சிரித்துப் பேசினோம்!
வானவழிப் போரில்காக்க
வாங்கும் ஆயுதம்
ஆனமட்டும் பழிகள் சொல்லி
அடக்கப் பார்த்துளோம்!
ஏனெதிரி தாக்கமாட்டான்
ஈனக்கும்பலே!
No comments:
Post a Comment