Sunday, 28 December 2025

நாவசைத்துச் சுட்ட வடு

 நாவசைத்துச் சுட்டவடு ஆறாது என்றுசெந்

நாப்போதான் சொல்லிவைத்தான்!

ஏவிவிட்ட நெஞ்சகமும் இழுக்குரைத்த தீநாக்கும்

எரிவதனைச் சொல்லவிலையே!

பூவனைய மனசுகளைப் புண்படுத்தி நானுரைத்த

புன்மொழிகள் நெஞ்சுசுடுமே!

தாவி இங்கு மீண்டுவந்து பிரம்மாஸ்திரமாகத்

தாக்கியெனைக் கொல்லவருமே!

No comments:

Post a Comment