நாவசைத்துச் சுட்டவடு ஆறாது என்றுசெந்
நாப்போதான் சொல்லிவைத்தான்!
ஏவிவிட்ட நெஞ்சகமும் இழுக்குரைத்த தீநாக்கும்
எரிவதனைச் சொல்லவிலையே!
பூவனைய மனசுகளைப் புண்படுத்தி நானுரைத்த
புன்மொழிகள் நெஞ்சுசுடுமே!
தாவி இங்கு மீண்டுவந்து பிரம்மாஸ்திரமாகத்
தாக்கியெனைக் கொல்லவருமே!
No comments:
Post a Comment