Tuesday, 30 December 2025

புரிவதில்லை காரணங்கள்

 புரியாத காரணங்கள்

(கவிதை உறவு)

ஆக்ரோஷம் மிக்கஒரு

அலைகடலின் மீதெழுந்து

ஆத்திரமாய் வருகிறது

அடர்நுரைகள் பலசேர்ந்து!

ஆனாலும் கரைதொட்ட

 அரைநொடியில்  அது ஓய்ந்து

அமைதியுடன் பின்வாங்கி

ஆழ்கடலில் சேர்கிறது!

என்னபயன் மீண்டுமது

இன்னுமொரு அலையாகும்

சொன்ன அதே ஆக்ரோஷம்.

தொடல்கரையை;ஓய்வடைதல்!

பிரஞ்சமெனும் கடல்முதுகில்

பிறைக்கிளிஞ்சல் நாமெல்லாம்!

பிறந்தோய்ந்து போவதற்குப் 

புரிவதில்லை காரணங்கள்!


No comments:

Post a Comment