புரியாத காரணங்கள்
(கவிதை உறவு)
ஆக்ரோஷம் மிக்கஒரு
அலைகடலின் மீதெழுந்து
ஆத்திரமாய் வருகிறது
அடர்நுரைகள் பலசேர்ந்து!
ஆனாலும் கரைதொட்ட
அரைநொடியில் அது ஓய்ந்து
அமைதியுடன் பின்வாங்கி
ஆழ்கடலில் சேர்கிறது!
என்னபயன் மீண்டுமது
இன்னுமொரு அலையாகும்
சொன்ன அதே ஆக்ரோஷம்.
தொடல்கரையை;ஓய்வடைதல்!
பிரஞ்சமெனும் கடல்முதுகில்
பிறைக்கிளிஞ்சல் நாமெல்லாம்!
பிறந்தோய்ந்து போவதற்குப்
புரிவதில்லை காரணங்கள்!
No comments:
Post a Comment