Wednesday, 24 December 2025

சாகப்பிறந்த வாழ்வு

 சாகப் பிறந்த வாழ்வு

(சுதந்திரம்-1957)

வாழ்க்கை வெறும் நெடுந்தொலைவுப்

பாலைவனம்;அதன்வழியில்

பாழ்த்ததுளி நம்பிக்கைப்

      பொய்யுருவாம் கானல்நீர்!


கண்காணா நெடுந்தொலைவில்

கற்பனையாம் இன்பநகர்;

புண்பட்டுச் சாகின்றோம்;

புழுதிமணல் துன்பத்தில்.


எண்ணமிடும் இன்பமெனும்

இலட்சியத்தை அடைவதற்குள்

கண்மறைக்கும் துயர்க்குன்று,

கவலையெனும் பலகடல்கள்!


உல்கமொரு பெருமாயை

உன்மத்த இதயத்தின்

நிலைகாணும் கனவு வெளி;

நிஜ இன்பம் எங்குளது?

அழுதுலகில் பிறந்தோம் நாம்!

அழுதுகொண்டே வாழ்கின்றோம்1

அழுகையுடன் சாம்பரென

அவதியெனும் பேருலகில்


பிணிகள் நரை மூப்பாகிப்

பயங்கரமாம் மரணத்தில்

அணுவொன்றிக் கலந்திடுவோம்;

அகம் மகிழ ஏது இடம்?





 

No comments:

Post a Comment