திருப்பிப் பார்க்கிறேன்!
எழுதிய தாளைத் திருப்பிப் பார்க்கிறேன்;
பிழைகள் எத்தனை! விட்டவை எத்தனை!
படித்துப் பார்த்துப் பண்ணிய தவறுகள்
அடித்துத் திருத்த அவகாச மில்லை!
கணகண கணவெனச் சேவகன் அங்கே
மணியை அடிக்கக் காத்து நிற்கின்றான்!!
எழுத்தை நிறுத்து! ஏடுகள் கோத்திடு!
கழுத்தின் பின்னே குரல் கேட்கிறது!
படித்தது, பயின்றது எல்லாம் தப்பு!
அடுத்த தேர்வுக்கு ஆரம் பிக்கலாம்!
No comments:
Post a Comment