Friday, 19 December 2025

இசையமுது

 இசையமுது

சிவாஜி-1956

இங்கிதமாய்ப் பொங்கிவரும்

இன்னிசையைக் கேட்கின்றேன்;

எங்கிருந்து வருவதிது?

எழிலமுதைக் கூட்டுவதார்/


பாடல்வரித் தேவஒளி

பார்முழுதும் சோதிதரும்;

நாடுதொறும் பரந்தோடும்

  நாயக,நின் பாட்டினுயிர்!


நல்லருவி புனிதத்வ

நாதஇசை ஊற்றாகக்

கல்லெல்லாம் பொடியாக்கிக்

கானாறாய் ஓடிவிடும்!


பாடலிலே பங்குபெறப்

பாவிமனம் விழைகிறது!

கூடியுடன் நானிசைக்கக்

குரலுக்கு என்செய்வேன்?

பண்ணிசைக்க எண்ணுகிறேன்;

பாடுகிறேன்;சீவனிலை;

புண்படிந்த நெஞ்சத்தால்

புலம்புகிறேன்; பாட்டிதுவா?


தெவிட்டாத நின் அமுதத்

தேனிசையாம் வலைக்குள்ளே

கவிதையிலே இதயத்தைக்

கைப்பற்றி விட்டாய் நீ!

(தாகூரைத் தழுவியது)

!


No comments:

Post a Comment