எங்கள் Jeevan Bima Enclave விநாயகர் குறித்து இன்று காலையில் முகிழ்த்த சிறு கவிதை:
காப்பீட்டு ஒடுக்கத்தில் களிற்றுமுகன் வீற்றிருந்து
கருணைமழை பொழியுகின்றான்;
காப்பிட்டோம் வெள்ளியிலே சந்தனத்தால் மலராலே
மேனியினை நேர்த்திசெய்தோம்;
தோப்புக்கரணமிட்டுச் சிரம்குட்ட நகைசெய்து
தொந்தியினைக் குலுக்குகின்றான்!
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அவன்
குறைகளெலாம் தீர்த்துவைப்பான்!
No comments:
Post a Comment