Saturday, 20 December 2025

ஜீவன்பீமா

 எங்கள்   Jeevan Bima Enclave  விநாயகர் குறித்து இன்று காலையில் முகிழ்த்த சிறு கவிதை:

காப்பீட்டு ஒடுக்கத்தில் களிற்றுமுகன் வீற்றிருந்து

கருணைமழை பொழியுகின்றான்;

காப்பிட்டோம் வெள்ளியிலே சந்தனத்தால் மலராலே

மேனியினை நேர்த்திசெய்தோம்;

தோப்புக்கரணமிட்டுச் சிரம்குட்ட நகைசெய்து

தொந்தியினைக் குலுக்குகின்றான்!

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அவன்

குறைகளெலாம்  தீர்த்துவைப்பான்!

No comments:

Post a Comment