Sunday 27 August 2017

பகவத் கீதையிலிருந்து நான் எடுத்துக்கொண்டவை--1

பகவத் கீதையிலிருந்து நான் எடுத்துக்கொண்டவை-1
( Takeaways from the Bhagavad  Gita)
ஒரு பிரச்சினையைச் சமாளிக்க இதுதான் வழி  என்று தீர யோசித்து ஒரு முடிவை எடுக்கிறோம். Hard decisionதான். வேறு வழியில்லை. முடிவெடுத்ததும் மனது தெளிவாகிறது. செயல்படுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறோம். உற்சாகத்துடன் செயற்களத்தில் நுழைகிறோம். ஆனால் சூழ்நிலையை நேருக்கு நேர் சந்திக்கும்போது  பிரச்சினை நமக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றி விடுகிறது. தளர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. மனமும் உடலும் சோர்ந்து போகின்றன. எல்லாவற்றையும் விட்டு ஓடிவிட்டால் தேவலாம் போலத் தோன்றுகிறது..மூளை அதற்குத் தோதான வாதங்களை logical ஆக ஒன்றொன்றாக எடுத்துக் கொடுக்கிறது.
என்றாலும் நமக்கு ஒரே குழப்படியாக இருக்கிறது. நமக்கு உற்ற நண்பன், நல்லவன், நாலும் தெரிந்தவனிடம்,” எனக்கு ஒண்ணும் புரியலேப்பா!” என்னதான் செய்யணும், எது சரி தப்பு, , நீயே சொல்லு என்று பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து விடுகிறோம். (தள்ளி விடுகிறோம்?)

ஆலோசனை சொல்கிறவனாகப்பட்டவன் என்ன செய்ய  வேண்டும்?  அனுதாப வார்த்தைகள் சொல்லக்கூடாது., அவனோடு ஒத்துப்போவது போல ஒத்துப்போய் பிறகு அவனை நம் வழியில் திருத்தலாம் என்று “Yes,but” உத்தியை எல்லாம் கையாளக் கூடாது. ஒரே சம்மட்டி அடியாக அடித்துவிடவேண்டும்—மோகமுத்காரம் என்பது போல! ,”அடட! நமது எண்ணத்தில் தவறு இருப்பது போல இருக்கிறதே!” என்று சிந்தனை திசை திரும்ப ஆரம்பிக்கும். தொடர்ந்து ஒரு புன்னகையும் பூத்தால் (Disarming Smile) பிரச்சினை  நாம் நினைக்கிறாற்போல்அவ்வளவு ஒன்றும் பெரிது இல்லை போல இருக்கிறதே! இது ச்சும்மா ஜுஜுபி என்பது போல சிரிக்கிறானே என்று ஒரு re-assurance ஏற்படும் .Counselling  செய்கிறவன் அடுத்து தன் பணியைத் தொடரலாம்..

No comments:

Post a Comment