Thursday 10 August 2017

இசையமுது- சிவாஜி-1956

இசையமுது
சிவாஜி-1956
இங்கிதமாய்ப் பொங்கிவரும்
     இன்னிசையைக் கேட்கின்றேன்;
எங்கிருந்து வருவதிது?
     எழிலமுதைக் கூட்டுவதார்/

பாடல்வரித் தேவஒளி
     பார்முழுதும் சோதிதரும்;
நாடுதொறும் பரந்தோடும்
     நாயக,நின் பாட்டினுயிர்!

நல்லருவி புனிதத்வ
     நாதஇசை ஊற்றாகக்
கல்லெல்லாம் பொடியாக்கிக்
     கானாறாய் ஓடிவிடும்!

பாடலிலே பங்குபெறப்
     பாவிமனம் விழைகிறது!
கூடியுடன் நானிசைக்கக்
     குரலுக்கு என்செய்வேன்?
பண்ணிசைக்க எண்ணுகிறேன்;
     பாடுகிறேன்;சீவனிலை;
புண்படிந்த நெஞ்சத்தால்
     புலம்புகிறேன்; பாட்டிதுவா?

தெவிட்டாத நின் அமுதத்
     தேனிசையாம் வலைக்குள்ளே
கவிதையிலே இதயத்தைக்
     கைப்பற்றி விட்டாய் நீ!
(தாகூரைத் தழுவியது)
!



No comments:

Post a Comment