Wednesday 9 August 2017

அப்போதைக்கிப்போதே..


அப்பாதான் விழித்துவிட்டார் கேட்போ மென்று
     அருகில்வந்து பிள்ளையெல்லாம் சுற்றி நின்று
தப்பாமல் சொல்லிடுங்கள் எங்கே வைத்தீர்
     சற்றேதான் நினைவுகொண்டு சொல்லும் என்ன
செப்புதற்கு நாவருமோ சித்த மும்தான்
     தெளிவாக இருந்திடுமோ தெரிய வில்லை;
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்
     ஆதார்கார்ட் பீரோவில் வெச்சிருக்கேன்!

     

No comments:

Post a Comment