Tuesday, 13 January 2026

பவனி வருகிறாள்.


பவனி வருகிறாள்..

பவனி வருகிறாள்-அவள்


பவனி வருகிறாள்!


பாசக்கணவன் பாரதியோடு


பவனி வருகிறாள்-(அவள்)பெண்ணவள் ஆணுக்(கு)


இளைப்பிலை என்று


பாடிய பாவலன் பாரதியோடு


(பவனி)


கரத்தால் தோளை கவ்விய வண்ணம்


கவிஞர் ஏறு புன்னகை பூக்கப்


(பவனி)


வண்ணத் தேரில் பொற்சிலையாக்


வருகிற வழியில் மக்கள் கூட்டம்


வண்டுகள் போல மொய்த்திடவேதான். பெண்ணரசிஅவள்( பவனி)


பித்தன் மனைவி என்றேசிய ஊர்க்கு


பெருமிதம் சுமந்து பீடுடனே அவள் (பவனி)


கோலம் சிதைத்துக் கொடுமை இழைத்தார்


கோலாகலமாய்க் கோவில் கொள்ளப்(பவனி)

Monday, 12 January 2026

சாரதா தேவி..

 மன  அமைதிக்கு அன்னை சாரதா தேவி சொல்லும் வழி…


அன்னை சாரதா தேவியின் உபதேசங்களின் பிழிந்தெடுத்த சாரமாக ஒன்றைச் சொல்லலாம். பிறர் மீது குற்றம் காண்பதைத் தவிர்க்க வேண்டும். இது ஆன்மிக முன்னேற்றத்துக்கு உதவும் என்பது மட்டுமல்லாமல் சிறந்த வாழ்வியல் தத்துவமும் ஆகும். நமது மன அமைதிக்கும் எடுத்துக்கொண்ட பணியை எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் சிறப்பாகச் செய்வதற்கும் இதுவே வழியாகும்.


நாம் ஏன் பிறர் மீது குற்றம் சொல்கிறோம்? நாம் முன்னெடுத்துச் செய்யும் பணியில் சில இடைஞ்சல்கள் வருகின்றன. சில நேரங்களில் தோல்வியே வந்து சேர்கிறது. அந்த நேரங்களில் தோல்விக்குக் காரணம் காட்ட யாரோ ஒருவர் தேவைப்படுகிறார். (நம்மைத்தவிர.) முதலில் நாம் என்ன தவறு செய்தோம் என்று சிந்திப்பதுதானே அறிவுடைமை?  அப்போதுதானே நாம் அமைதியாகச் சிந்தித்து, சரிவரச் செயல்பட்டு, மற்றவர்களையும் தவறின்றி வழி நடத்த முடியும்? பொறுப்பை உன் தோள்களில் சுமத்திக்கொள் என்றுதானே சுவாமிஜி நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்?


சில நேரங்களில் ஏதோ ஒரு காரணத்தால் யாரோ ஒருவரை நமக்குப் பிடிக்காமல் போகிறது.(சின்ன வயசில் நம்மைத் துன்புறுத்திய ஆசிரியரின் மூக்கு போல இவர் மூக்கும் நீளமாக இருக்கிறது என்பதும் ஓர் ஆழ்மனக் காரணமாக இருக்கலாம்.)


இந்தக் குற்றம் காணும் சுபாவம்-மன நோயாகவே இருக்கலாம். (Pathological).அல்லது சுவாமிஜி சொல்வது போல் முன்னைப் பழவினைகளின் தொந்தமாக இருக்கலாம்!


எது எப்படி ஆயினும் இந்தக் குறைபாட்டை நாம் நீக்கிக் கொண்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால், வாசனை தீவிரமாகும். பழக்கம் அதிகரிக்கும்.  நமது பண்பைப் பாதிக்கும். சூழ் நிலையைத் துன்ப மயமாக்கும்.


எப்படிச் செய்யலாம் இதை? சுவாமிஜி சொல்கிறார்  ஏதாவது ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு தீவிரமாகப் பயிற்சி செய் என்று. ஏன் இந்தக் கருத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது? 

காஞ்சிப் பெரியவர்கள் மன அழுக்கு நீங்க வேண்டுமென்றுமென்று இறைவனிடம் பக்தியுடன் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.. காந்திஜி ராம நாமத்தைச் சொல்கிறார்கள். அபிராமி பட்டர் நெஞ்சத்து அழுக்கையெல்லாம் அம்மை அருட்புனலால் துடைப்பாள் என் கிறார்.


அன்னை சாரதா, சுவாமிஜி, ஆன்மிகப் பெரியவர்கள், இறைவன் இவர்கள் அனைவரும் அழுக்கு நீக்கும் நம் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கட்டும். மனப்பூர்வமாக முயற்சி செய்தால் இறைவன் “மடிசெற்றுத் தான் முந்துறும்.” 

Saturday, 10 January 2026

நிர்வாணம்

 

நிர்வாணம் என்பது இதுவேயோ

நிர்வாணம் என்பது இதுவேயோ?

நிறை நிலை என்பது இதுவேயோ?

என்னால் நொந்தவர் பலரினையும்

இறைவன் முன்னால் சிந்தித்து

மன்னித்திடு நீ எனக்கேட்டு

மண்டியிட்டுப் பிரார்த்தித்தேன்!

என்னை நோக வைத்தவர்கள்

எல்லாரையும் நான் மன்னித்து

அன்புப்புனலால் நீராட்டி

ஆண்டவனிடத்தில் அர்ப்பித்தேன்!

கற்றுக்கற்றுப் புத்தியிலே

கற்றைச் சடையாய் மண்டியதை

ஒட்டச்சரைத்துப் புனலுக்குள்

ஓடம்விட்டுக் களிப்புற்றேன்!

கற்பதற்கென்று வைத்திருந்த

கட்டுக்கட்டு  நூல்களெலாம்

சற்றும் தயக்கம் இல்லாமல்

தழலில் இட்டுச் சிரித்திட்டேன்!

மண்டிக்கிடக்கும் புதராக

மனதில் நிறைந்த பாவவினை

புண்ணியம் என்ற புனைபெயரில்

பற்றுக்கட்டுக் கர்மவினை

முதுமை,இயலா உடற்குறைகள்

முணுமுணுமனத்துதவிப்பெல்லாம்

இதம் ந மம என்றோதி

யாக அக்னியில் பொசுக்கிட்டேன்!

கசக்கும் இனிக்கும்நினைவுகளைக்

களைந்து நதி நீர் ஓட்டத்தில்

கசகசகசவெனும் ஆடையுடன்

கரைத்து இயற்கைக்கர்ப்பணித்தேன்

நிர்வாணம் என்பது இதுவேயோ?

நிறை நிீலை என்பது இதுவேயோ?

சின்னக்குழந்தை ஆனேனோ?

சீவன்முக்தன் ஆனேனோ?

Friday, 9 January 2026

கார்சியா


கார்சியாவுக்கு  ஒரு கடிதம்



அண்மையில் வேதாந்த கேசரி ஆங்கில இதழில் படித்த கட்டுரையின் தலைப்பு இது.



கார்சியாவுக்கு ஒரு கடிதம் என்பது ஒரு குறியீடு. “வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவான்” என்பார்களே, அதைவிடப் பன்மடங்கு சிறப்பான பணித்திறன்.



அமெரிக்காவுக்கும் ஸ்பெய்ன் தேசத்துக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்தது. அமெரிக்க அதிபருக்கு க்யூபா நாட்டில் உள்ள ஓர் ஊடுருவல்காரனுடன் தொடர்பு கொள்ள  வேண்டியிருந்தது. அவசியம். அவசரம். ஆனால் அந்த கார்சியா க்யூபாவில் எங்கு இருக்கிறான் போன்ற எந்த விவரமும் தெரியாது.  என்ன செய்வது?



அதிபரின் காதில் ஒருவர் கிசுகிசுத்தார். அமெரிக்க ராணுவத்தில் உள்ள ரோவான் என்பவர் மட்டுமே இதைச் சாதிக்க வல்லவர்.



ரோவானைத் தருவித்து அதிபர் தேவையைச் சொன்னார்.



மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான் என்று இப்படிச் சொன்ணால் என்ன செய்வது?


க்யூபாவில் அவருக்கு நெருக்கமானவர் யார் என்று ஒரு பெயராவது தெரியுமா?


அவர் சார்ந்த உளவு நிறுவனத்தின் பெயர் என்ன?


உத்தேசமாக எந்தப் பகுதியில் இருப்பார் என்றாவது சொல்ல முடியுமா?


என்றெல்லாம் அவர் கேள்வி எழுப்பவில்லை.



கடிதத்தை வாங்கி, தண்ணீர் படியாத ஒரு உறையில் இட்டு சீல் வைத்துக்கொண்டு, மார்பில் இறுக்கிக் கட்டிக்கொண்டு புறப்பட்டார். திறந்த தோணியில் பயணித்து, யாருக்கும் தெரியாமல் க்யூபாவின் காட்டுப்பகுதிக்குள் தேடி அலைந்து கார்சியாவைச் சந்தித்துக் கடிதத்தைக்  கொடுத்து விட்டு, மூன்று வாரங்கள் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டுச் சுற்றி வேறு வழியாக க்யூபாவை விட்டு விலகி வெளியே வந்தார். பசியா? தாகமா? தூக்கமா? யாருக்குத் தெரியும்?



இத்தகைய செயல்பாட்டின் குறியீடுதான் கார்சியாவுக்கு ஒரு கடிதம்.



இதற்கு நேர்மாறான ஒரு செயல்பாட்டையும் கட்டுரை குறிப்பிடுகிறது.



தலைவர் ஒரு “எக்ஸ்” என்கிற பணியாளரைக் கூப்பிட்டு, “என்சைக்ளோபீடியாவிலிருந்து, கரஸ்கோவ் என்பவரைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதிக்கொண்டு உடனே வா” என்கிறார்.


எக்ஸ் கேட்பது:


எந்த என்சைக்ளோபீடியா?


எங்கிருக்கும்.?


நூலகர் விடுப்பில் இருக்கிறாரே?


அவர் இல்லாதபோது புத்தகத்தை எடுத்தால் பிரச்சினை ஆகி விடுமே?


ஏற்கனவே எங்கள் துறைக்கும் அவரது துறைக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கிறது..


அது சரி,இந்த கரஸ்கோவ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? எந்த்த் துறையில் வல்லவர்?


குறிப்பெடுப்பதெல்லாம் சார்லசுடைய வேலையாயிற்றே? என் வேலை இல்லையே?



இத்தனைக்கும் தலைவர் பொறுமையாக பதில் சொல்கிறார்.



எக்ஸ் அரைமணி நேரம் யார் யாரையோ உதவிக்கு வைத்துக்கொண்டு தேடி  அலைந்து விட்டு வந்து, ”கரஸ்கோவ் என்று யாருமே இல்லை சார்” என்று  பதில் சொல்கிறார்.



தலைவர் புன்னகைக்கிறார்.


கரஸ்கோவை சி என்ற முதல் எழுத்தைக்கொண்டு தேட வேண்டும்; கே யில் அல்ல என்று சொல்ல அவர் மெனக்கெடவில்லை.


 நாம் தலைவராக இருந்தால் ஒரு பணிக்குத் தேர்ந்தெடுப்பது ரோவான் போன்றவரையா? எக்ஸ் போன்றவரையா?



நாம் பணியாளராக இருந்தால் ரோவான் போல இருப்போமா? எக்ஸ் போல இருப்போமா?


நாள்தோறும்..

 Edit with the Docs app


நல்லதையே எப்போதும். நாடு.

நன்றே கருதிட்டு நாளும் வினைசெய்தால்


வென்றிடுவாய் எண்ணியவை யாவையுமே--என்றுரைத்தார்


செல்லம்மா நாயகனார் என்பதனை நன்கோர்ந்து


நல்லதையே எப்போதும் நாடு.


டி.எஸ்.வேங்கடரமணி

Thursday, 8 January 2026

The fire chick


The fire chick that Sri Ramakrishna placed…



Swami Vivekananda sent the message, “Service to mankind alone is the service to the Lord” in the loudest and the clearest terms to the whole world. Gurubhais of Swamiji did not buy his theory and thought that he was introducing western concepts into Indian theories of Spirituality masquerading them as Sri Ramakrishna’s teachings. In their view, Moksha, or Self realization alone is the goal of spirituality. And, the Master did not teach anything contradicting it. Swami put his foot down and incorporated service motive as an essential part of the Mission of Sri Ramakrishna sangha he founded. Love of the Master Sri Ramakrishna bound all the disciples together, and all of them had enormous confidence in the leadership of Swami Vivekananda. They had abundant love for him and his views were therefore accepted in the formation of the Mission. It is because of this insistence by Swamiji, we find the Sri Ramakrishna Math engaging themselves in various welfare activities even today.



Well, where is the authority that Sri Ramakrishna spoke about service to people as essential part of spirituality? We get it from an episode narrated in Lilaprasanga quoted by the biographer Sudhir Dhar.



One day, the conversation Sri Ramakrishna had with his disciples drifted to Vaishnav religion. The Master observed,” This religion enjoins upon its followers the practice of three things—delight in the name of God, compassion for all Jivas, (living beings) and service to the devotees of Vishnu.” Just as he was finishing this sentence, he passed in to Samadhi. Still in an unconscious mood, he said, as if to himself,”Jiva daya, Jiva daya! Thou fool! An insignificant worm crawling on earth, thou to show compassion to others! No, no, it is not compassion for others, but it must be service to all creatures, recognizing that all creatures are God!”



Even though all the devotees assembled thee heard these words, Swami Vivekananda (then only Narendra) alone understood their implications. He said, “What a strange light have I discovered in the wonderful words of the Master! How beautifully he has reconciled the ideal of Bhakthi with the knowledge of the Vedanta! I have understood from these words of wisdom that the ideal of the Vedanta lived by the recluses in the forests can be practiced at home and applied to all our daily concerns. It is He who has become all the different creatures-object of our love; and yet He is beyond all these. Such realization of the Divine in all the created beings and the world leaves no room for egotism. Service of man, knowing him to be the manifestation of the God, purifies the heart, and in no time such an aspirant realizes himself as part and parcel of God-existence-Knowledge-Bliss... Well, if God wills, the day will come when I shall proclaim the great Truth before the world at large-I shall make it the common property of all-the wise and the ignorant, the rich and the poor, the Brahmin and the Chandala!”



Yes, that day came, and the Swamiji proclaimed this great Truth from one end of the earth to the other. Thus, the fire chick (agnikkunju) that Sri Ramakrishna placed in the young heart of Narendra turned in to a great spiritual conflagration that encompassed the whole world.

Police encounters



Police encounters—(with a difference.)



Mahatma Gandhi was in the thick of Public and Political activities for well over 50 years of his life and there is no wonder he had several confrontations with the Police and other law enforcing agencies. Mahakavi Subramania Bharathiyar was in exile from the British India in the erstwhile French territory of Pondicherry. He, a few other compatriots and admirers were severely harassed by the British Police which had almost besieged Pondicherry to nose in on the activities of a few patriots like Bharathiyar, Sri Aurobindo, V.V.S. Iyer and others. The Posse of Police posted at Pondicherry numbered 200 under a deputy Superintendent of Police and included 2 Inspectors under whom several sub Inspectors, head Constables and constables worked... Just to watch the activities of patriots who numbered less than ten. There were several funny and ridiculous exercises made by this force which we will see some time later.



But what the Police force did have to do with a wandering monk like Swami Vivekananda? Yet, there were a few occasions when the Police had encountered Swamiji. These instances have been recorded by Shri Nagendra Nath Gupta in his “reminiscences.”


Swamiji was in Bihar when there was great excitement in that province on account of the marking of mango trees with lumps of mud mixed with vermillion and seed grain. In a number of districts in Bihar numbers of mango trees were marked in this fashion. The British Government sensed some evil designs of a mutiny in this and they associated with this the moving about of sannyasis in the Province. In these circumstances, a mounted Police officer followed by some Policemen, accosted Swamiji and made enquiries about him. Suddenly the officer became rude and accused that all sadhus were rogues and threatened to arrest Swamiji. Swamiji asked him calmly, how long he would be put in jail. The officer replied, “For about a month.” Swamiji went near him and in an ingratiating and appealing voice, said, “Only for a month? Can you not put me away for six months?” To the surprised official, he explained, “Life in jail is much better than this. The work there is not hard compared with this wearisome tramp from morning till night. My daily food is uncertain, and I have often to starve. In the jail I shall have two square meals a day.” The official abruptly ordered Swamiji to go away. It is an interesting sidelight that the marking of mangoes was merely by way of an agricultural mascot for a good mango!



Another encounter took place at Calcutta. One day Swamiji met a police officer who was a family friend. He was a superintendent of Police in Criminal Investigation department. He invited Swamiji for dinner at his residence. When Swamiji went there, there was no sign of dinner. The host was dragging on with several inanities and suddenly told Swamiji abruptly, “Come on, you had better make a clean breast of it and tell me the truth. You know you cannot fool me with your stories for I know your game. You and your gang pretend to be religious men but I have positive information that you are conspiring against the Government...” Swamiji was amazed and indignant. He confronted the officer to come out with the facts if we knew any thing. The Officer raised his voice, and said that he would be arrested as he was the ring leader. and if he became an approver, he would be let off.. Swamiji was unperturbed. Rising from his seat, he quietly closed the door. He said,  “You have called me to your house on a false pretext and have made a false accusation against me and my companions. That is your profession. I, on the other hand have been taught not to resent an insult. If I had been a criminal and a conspirator, there would be nothing to prevent me from wringing your neck before you could call out for help. As it is, I leave you in peace.” And Swamiji opened the door and went out, leaving the redoubtable police officer speechless with ill concealed fright.



That was the last encounter Swamiji had with the Police!


Vivekananda

 Edit with the Docs app

Make tweaks, leave comments and share with others to edit at the same time.

NO, THANKSUSE THE APP

Love India

Love India!



All of us know that Swami Vivekananda was a sannyasi with a difference. He crossed the ocean when it was taboo for saints, and carried the spiritual message of India far and wide. When it was considered that personal Mukthi was the goal of sannyasa, he created an order of Sannyasis dedicated to the service of the Poor. But, was he a patriot in the much understood sense of the term?



His intense feeling of love for the country and the heart’s bleeding for its decrepit state have been expressed in private discussions with some of his admirers.



Mr.Nagendra Gupta recollects a conversation in 1897 and says,” What struck me most was the intensity of Vivekananda’s feelings and his passionate devotion to the cause of the country”. He quotes Swamiji:


“The middle classes in India are a spent force. They have not got the stamina for a resolute and sustained endeavour. The future of India rests with the masses.” “If it would help the country in any way I am quite prepared to go to prison...” Mr.Gupta admires Swamiji’s unusually prophetic vision and writes,” No one had then heard of non co operation or Civil Disobedience, and yet, Vivekananda, who had nothing to do with politics, was standing in the shadow of events still in coming. His visit to Japan had filled him with enthusiastic admiration for the patriotism of the Japanese nation. “Their country is their religion”, he would declare, his face aglow with enthusiasm, “ the national cry is ‘dei Nipppon, bazai! Live long, great Japan!’ The country before everything else. No sacrifice is too great for maintaining the honor and integrity of the country!”



To Mr. Haripada Mitra who said that Sannyasis should love the whole world and should be above any attachment for their own country, Swamiji gave a ‘burning reply’:-“How can a man who does not feed his own mother look after other people’s mothers?”



On reading in the Newspaper that a man died of starvation in Calcutta, Swamiji poured forth his agony thus:-“Now the country is about to go to rack and ruin!” “don’t you see that in other countries hundreds of people die every year, in spite of their poor houses, work houses, Charity Funds etc.,? But in our country we never heard of death through starvation because of the system of alms-giving in vogue here! This is the first time I read in Newspapers that a man dies of starvation in Calcutta, even though there is no famine!”



The quintessence of Swamiji’s spirit of Patriotism cannot be better expressed than in his own words as spoken to K.Sundara Rama Iyer of Trivandrum. ”Practical patriotism means not a mere sentiment or emotion of love of the motherland, but a passion to serve our fellow countrymen. I have gone all over India on foot and have seen with my own eyes the ignorance, misery and squalor of our people. My whole soul is afire. I am burning with a fierce desire to end such evil conditions. Let no one talk of Karma. If it was their Karma to suffer, it is our Karma to relieve the suffering. To reach Narayana you must serve the Daridra Narayanas.-the starving millions of India.”



Ms.Josephine Macleod of America was a dear disciple of Swamiji. Once she put this question to him: “Swamiji, How can I best help you?”



Swamiji’s terse reply was,”Love India”

மிஷ்லா

 Edit with the Docs app

Make tweaks, leave comments and share with others to edit at the same time.

NO, THANKSUSE THE APP

மிஷ்லா


மிஷ்லா


 


டி.எஸ்.வேங்கட ரமணி


 


மிஷ்லாவின் போட்டோவும் பெயரும் இன்று காலைப் பேப்பர்களில் வந்துள்ளன. இன்று மிஷ்லா என்றால் யாருக்கு தெரியப் போகிறது? இப்போது அவள் பரவலாக அறியப்படும் பெயர் ராஜலட்சுமி ஐ.ஏ.எஸ்.


 


ஐ.ஏ.எஸ்.ராஜலட்சுமி எனக்கு மனசுக்குள் வரவே மாட்டேன் என்கிறாள். என் மனசில் இன்னும் நிற்பதெல்லாம் இரட்டைப் பின்னல், செஞ்சாந்துப் பொட்டு ,பாவாடை,தாவணியில்,எப்போதும் குறுகுறுப்பாக இருக்கும் சுட்டிப் பெண்,எச்சுமி, மிஷ்லா என்று புனை பெயர் சூட்டிக்கொண்டு, கொட்டு முரசு கையெழுத்துப் பத்திரிகையிலும், இளம் கவிஞர்கள் அரங்குகளிலும் லட்சியக் கங்குகளை வீசிக்கொண்டிருந்த அந்த முகம்தான்.


 


ஆரம்ப எண்பதுகள். மிஷ்லா எனக்கு அறிமுகமான அந்த சந்தர்ப்பத்திலும் அவள் போட்டோ பேட்டி, பத்திரிகைகளில் வந்திருந்தது. பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக வந்திருந்தாள். பதினொன்றாம் வகுப்பில், மயிலாப்பூர் மேல் நிலைப்பள்ளியில் சேர்ந்தாள்.அங்கு படித்துக் கொண்டிருந்த என் பெண் கவிதாவின் வ்குப்புத் தோழி ஆனாள். அவ்ள் மூலம் கவிதாவுக்கும் எனக்கும் ஓர் இளைஞர் குழு பரிச்சயம் ஆகியது. அந்தக் குழு, ஒரு இலட்சிய, இலக்கிய ஆர்வக் குழு. ”இன்றைய இளைஞர்கள் சமுதாயமே கெட்டுப் போய் விட்டது. நாடு குட்டிச் சுவராகத்தான் போகப்போகிறது” என்று அரிஸ்டாட்டில் காலம் முதல் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறோம். சமீப காலமாக,adolescent psychology என்றெல்லாம் கருத்தரங்கு நடத்தி, கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நான் சொல்லும் இளைஞர்களைப் பார்த்தவர்களுக்கு எள்ளளவும் இத்தகைய சோர்வோ அவநம்பிக்கையோ வராது. இவர்கள் காந்திஜி பெயரில் ஒரு சங்கம் அமைத்து சிறிய அளவில் சமுக சேவைகள் செய்து வந்தார்கள். குழந்தைத் தொழிலாளர்களுக்கு பாடம் சொல்லித் தருவது, பார்வையற்றவர்களுக்கு படித்துக் காட்டுவது, பதிவு செய்து தருவது, ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது. கொட்டுமுரசு கையெழுத்து பத்திரிகையில் லட்சிய வேகம் மிக்க எழுத்துகள்தான் வெளியாகும். இவர்கள் சந்திக்கும்பொதெல்லாம் வெட்டிப் பேச்சு, அரட்டை என்று ஒன்றுமே இருக்காது. நல்ல இலக்கியம், சமுதாயப் பிரச்சினைகள், அந்த மாதம் ஆற்ற வேண்டிய பணி இப்படித்தான் இருக்கும். ஆச்சரியம்தான். ஆனால் உண்மை. இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து நடத்திய ஓர் இளைஞனைப் பற்றிச் சொல்ல வேண்டும்.வேணு. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்..காந்தியத்தில் ஆழ்ந்த பற்று. பாரதியிடம் பக்தி. சுவாமி விவேகானந்தரிடம் ஈர்ப்பு. எதிர்காலத்தில் கிராமப்புறத்து ஏழைக் குழந்தைகளுக்காக ஓர் இலவசப் பள்ளிக்கூடம் நடத்தப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.


 


கவிதா மூலமாக,எனக்கு மிஷ்லா, வேணு தொடர்பும் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தன. காந்திஜி சங்க செயல்பாடுகளில் நானும் பங்கு பெறும் வாய்ப்பை நல்கினார்கள். அங்கிள் என்று  மரியாதை அளித்தாலும் நண்பனாகப் பழகும் உரிமையைத் தந்தார்கள். அவர்களுடன் பழகும் போது நானும் ஓர் இளைஞனாகி விட்ட உணர்வே எனக்கு ஏற்படும்.


 


 


பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த இவர்கள் சேவைச் செலவுகளுக்கு தங்கள் பாக்கெட் மணி சேமிப்பையே பயன்படுத்தினர்கள். நிதி ஆதாரத்தை வலுப்படுத்த அவர்கள் புதியதோர் உத்தியை மேற்கொண்டார்கள். அவ்ரவர் வீட்டில் வரும் கல்கி, குமுதம், விகடன், கலைமகள் பத்திரிகைகளில் வரும் தொடர்களைச் சேமித்து பழுப்பு அட்டை போட்டு  தைத்து வாடகைக்கு கொடுப்பது. வாடகை வாரம் எட்டணா. அந்தந்த வாராந்திரக் கூட்டத்தில் கணக்கு கொடுக்க வேண்டும்.. இந்த நூலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு மிஷ்லாவுக்கு கொடுக்கப்பட்டது.


 


அந்த வார மீட்டிங்கில் மிஷ்லா எட்டணா உபரியாகக் கொடுத்தாள், அவள் சொன்ன விளக்கம், ”என்னிடம் இருந்த புத்தகங்களில் ஒன்றை நான் எடுத்துப் படித்தேன் அதற்கான கட்டணம் இது.”


 


இந்த சின்னப் பெண்ணிடம் இப்படி ஒரு நேர்மையா? எனக்கு வியப்பும் மகிழ்ச்சியுமாக இருந்தது. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரோ என்று எனக்குத் தோன்றியது. திரும்பி வீட்டுக்கு நான் கவிதா, மிஷ்லா, வேணு வந்து கொண்டிருந்தோம். நான் மிஷ்லாவிடம் சொன்னேன்,”அவ்வளவு துல்லியமாகக் கணக்கு பார்க்கத் தேவையில்லை. உன் வீட்டு புத்தகங்களையும் தானே கொடுத்திருக்கிறாய்? தவிரவும் நீ பொறுப்பெடுத்துக் கொண்டு வேலை செய்கிறாயே?”


 


வேணுவின் முகம் சட்டென்று மாறியது தெரிந்தது, வழக்கமாக என்னிடம் இனிமையாகவும் கனிவாகவும் பேசுபவன் சற்று கடுமையாகவே சொல்லி விட்டான்,”அங்கிள், நீங்கள் தவறான அறிவுரை. கொடுக்கிறீர்கள். பொதுப்பணியில் எந்தவித சமரசம் செய்து கொள்வதோ, முறைகேட்டை நியாயப் படுத்திக் கொள்வதோ கூடாது. . இந்தப் பாடத்தைத்தான் நாம் காந்திஜியின் சத்திய சோதனையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்:” நான் பதில் பேசவில்லை. சின்ன பையன் பேசுகிறான், வயது ஆக ஆக வாழ்க்கையில் அடிபட அடிபட விவேகம் வரும்!”


 


மிஷ்லா குழம்பியிருப்பது அவள் முகத்தில் தெரிந்தது.


 


ஏறத்தாழ 25 வருஷங்கள் ஆகி விட்டன. அவரவர்கள் கல்யாணம் வேலை என்று பிரிந்து போய் விட்டார்கள்.   வேணு திட்டமிட்டபடியே கிராமப்புறத்தில் ஏழைக் குழந்தைகளுக்காக இலவசப் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறான். ஆக வேணு மட்டும்தான் தன் கனவுகளுக்கு அஸ்திவாரம் கொடுத்து,தூண்  வைத்து, விடாமல் சேவை செய்து வருகிறான்,


 


மிஷ்லா ஐ.ஏ.எஸ்.தேறி மணிப்பூர், மேகாலயா,பீஹார் என்று எங்கெங்கேயோ சுற்றிக் கொண்டிருக்கிறாள். எப்போதாவது சென்னை வரும் போது இயன்றால் சந்திப்பு. அவ்வளவே. புத்தகத்துக்கு காசு கொடுத்த பழைய கதையைப் பிரஸ்தாபிப்பேன். அவள் பேச்சை மாற்றி விடுவாள். அச்சுப்பிச்சு பழைய பேச்சு பிடிக்கவில்லை என்று முடிவு கட்டிக் கொண்டு பிற்பாடு அந்தப் பேச்சையே எடுப்பதில்லை..


 


ஆரம்பத்தில் மிஷ்லா பெயர், போட்டோ பேப்பரில் வந்திருக்கிறது என்று சொன்னேனே, விஷயம் இதுதான். ஏதோ சலுகைக்காக ஐந்து லக்‌ஷம் ரூபாய் லஞ்சம் வாங்குகையில் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறாள். முகத்தை மூடிய படி போலீஸ் வேனில் ஏற்றிய செய்தியும் படமும்தான் அது..


 


 


வேணு சொன்னது சரி. நான் தான் தப்பு. ஒரு குழந்தை இயேசுவை யூதாஸ் ஆக்கிய பாவம் என்னுடையது. அன்று மாலை வேணுவைச் சந்தித்தபோது மிஷ்லா விவகாரம் பற்றிப் பேசி விடப் போகிறானோ என்று பயமாக இருந்தது.



Wednesday, 7 January 2026

அறநெறி

 புத்தகச் சுருக்கம்.

அறநெறிச் சமயம்

மோ.க.காந்தி

4.எது நற்செயல்?

நாம் செய்யும் காரியங்களை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ளலாம் .நற்செயல்கள், தீச்செயல்கள், நற்செயல்கள் அல்லாதவை.

எப்படி என்று பார்ப்போம். நம் அன்றாடம் பல காரியங்களைச் செய்கிறோம். அன்றாடக் கடமைகள். செய்தே தீர வேண்டும். செய்யாவிட்டால் சூழ்நிலை குழப்பமாகும். இவற்றை நற்செயல்கள் என்றும் சொல்ல முடியாது; தீச்செயல்கள் என்றும் சொல்ல முடியாது. நற்செயல்கள் அல்லாதவை என்று சொல்லலாம்.

நாம் செய்யும் காரியங்கள் நல்லதென்று உணர்ந்து முடிவெடுத்துச் செய்பவை நற்செயல்கள். நல்ல விளைவுகளை ஏற்படுத்தினாலும், நம் விருப்பத்தின் காரணமாக இல்லாமல் கடமை காரணமாகச் செய்யும் காரியங்கள் நற்செயல்கள் அல்லாதவை. குற்றம் சாட்டப்பட்டவனை, அரசன் மனம் கனிந்து மன்னித்து விடுதலை செய்ய முடிவெடுக்கிறான்.. நல்ல காரியம். மன்னிப்பு அளிக்கும் கடிதத்தைச் சேவகன் குற்றவாளியிடம் சேர்ப்பிக்கிறான். நல்ல விளைவுதான். ஆனால் அதை நற்செயல் என்று சொல்ல முடியாது.

பணியாளர் ஒருவர் எஜமானர் கோபிப்பார், வேலை போய்விடும் என்பதற்காக நேரத்துக்கு வந்து ஒழுங்காக வேலை செய்கிறார்.. நற்செயலின்பாற் படாது. சம்பளம் தரும் எஜமானருக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும், நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டுமென்று அதே பணியைச் செய்தால் அது நல்ல காரியம். முதலாளி ஒருவர், பணியாளர் வேலையை விட்டுப் போய் விடுவார், யூனியன்கள் அழுத்தம் தருகின்றன என்பதற்காக நல்ல சம்பளம், வசதிகள் செய்து தந்தால் அது நற்செயல் ஆகாது. அதே நல்ல சம்பளம்,  வசதிகளை, நம் ஊழியர்கள், மகிழ்வாக இருக்க வேண்டும், வசதியோடு வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு செய்தால் அது நல்ல காரியம் ஆகும்.

கிரேக்க மன்னன் மாவீரன் அலெக்ஸாண்டர் நாடுகளை வென்றான். அதனால் கிரேக்கக் கலைகள் கலாசாரம்,மொழி இவை பரவின. என்றாலும் அலெக்ஸாண்டரின் நோக்கம் அதுவல்ல. அவன் நோக்கங்கள் மண்ணாசையும் புகழாசையும். எனவே அது நற்செயலின் பாற்படாது.

இறைபக்தியை எடுத்துக்கொள்ளுவோம். அன்றாடக் கடமையாக இயந்திரம் பொலச் செய்கிறோம். அல்லது ’செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம்’  என்பதற்காகச் செய்கிறோம் அது நற்செயல் ஆகாது. இறைவனிடம் தன்னலம் கருதாத அன்பு, மனம் தூய்மைப்பட வேண்டும், பிரார்த்தனை என்பது புனிதக் கடமை என்பதற்காகச் செய்யப்படும் பிரார்த்தனை  நற்செயல் ஆகும்,

எனவே, நற்செயல் தன்விருப்பத்துடன் நல்ல நோக்கத்துடன்  தன்னலம் கருதாமல் செய்யும் காரியம் எனலாம்..

அறநெறி

 வாசித்ததை யோசிக்கிறேன்.

அறநெறிச் சமயம்

மோ.க.காந்தி.

5.அறம் வெல்லும்; பாவம் தோற்கும்.

நாம் அடிக்கடி ஒரு செயல் நல்லதா தீயதா என்று தீர்ப்பு சொல்கிறோம். அந்தச் செயல் நமக்கு நன்மை தரலாம், தீமை செய்யலாம் அல்லது நம்மை எந்தவிதத்திலும் பாதிக்காமல் இருக்கலாம். நமக்கு நன்மை செய்தால் அதை ஏற்றுக்கொண்டாலும் கூட, நம் மனம் சொல்லும் தீர்ப்பு-அது தீய செயல் என்று.

ஆக ஒரு செயல் நல்லதா தீயதா என்பது நமது சொந்த நலனைப் பொறுத்ததல்ல.நமது விருப்பத்தையும் பொறுத்ததல்ல. அபிப்பிராயங்கள் அவ்வப்போது மாறலாம். ஆனால் தர்மத்தின் விதிகள் மாறவே. மாறா.  யார் இயற்றிய விதிகள் அவை? பிரபஞ்ச  விதிகள்!

அரசாங்கத்தின் விதிகள் உள்ளன. . அரசாங்கச் சட்டத்தை மீறுவேன்; அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லலாம். ஆனால் யாரும் தர்மத்தை மீறுவேன்; பொய் சொல்லுவேன் என்பது போல மனமாரச் சொல்ல முடியாது. தர்மத்தை மீறி விட்டு அதை வெளியில் நியாயப்படுத்தலாமே தவிர, மனத்தின் குரலை அடக்கி விட முடியாது. அதனால்தான் சொன்னார் திருவள்ளுவர்,

,”தன் நெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின்

 தன் நெஞ்சே தன்னைச் சுடும்” என்று.

கொடுங்கோல் அரசன் அநீதியாகச் செயல்படலாம். பேய் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள். கற்றறிந்தோரும், நீதிநெறிகளை  நன்குணர்ந்தவர்களும், மௌனமாய் இருக்கலாம் “தீங்கு தடுக்கும் திறமில்லேன்” என்று  தன்னிரக்கப் படலாம்,. அதற்காக  அதர்மம். தர்மம் ஆகி விடுவதில்லை..

அற எது என்பது மாறாத தெய்வ நீதி என்பது மட்டும் அல்ல. ”அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்பதும் தெய்வ நீதியே.

“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;

தருமம் மறுபடி வெல்லும்” எனு மியற்கை

மருமம்”

என்றான் பாரதி.

அறநெறி

வாசித்ததை யோசிக்கிறேன்.

அற நெறிச் சமயம்.

மோ.க.காந்தி

7. அப்படியா சொன்னார் டார்வின்?

டார்வின் தன் நூலில் அற நெறியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார். டார்வினை ஆழ்ந்து படிப்பவர்களுக்கு இது புரியும். அவரது கூற்றுப்படி, தற்காப்பு உணர்ச்சி, மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் இருக்கிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் என்பது அவரது கோட்பாடு. இந்த்த் தகுதி என்பது என்ன? 

இந்தத் தகுதி உடல் வலிமையை மட்டும் குறிக்கவில்லை. கரடியும் எருமையும் மனிதனை விட வலிமை மிக்கவை. எனினும் மனிதன் தன் புத்தியைக் கொண்டு அவற்றை அடக்கி ஆள்கிறான். போரில் படைகளின் எண்ணிக்கையையும், வீர்ர்களின் புய வலியையும் மிஞ்சி, நல்ல தலைமையும், யுத்த தந்திரமும் மிகுந்த கட்சி வெற்றி பெறுகிறது.

உடல்வலிமைக்கும் புத்தி சாதுர்யத்துக்கும் அப்பால் அறத்தின் வலிமை ஒன்று இருக்கிறது. அதுவே வலியது என்கிறார் டார்வின். நல்லொழுக்கமுடையவன் பண்பற்றவனை விட அதிக நாள் நீடித்து நிலைக்கிறான் என்பதற்குப் பல சான்றுகள். தர்ம நெறி முக்கியமல்ல என்பது மேலோட்டமாகச் சிந்திக்கிறவர்களின் கருத்தானாலும் டார்வினின் கருத்து அதுவல்ல. மனித குல வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நற்பண்பில்லாத இனங்கள் அழிந்துபட்டுள்ளன என்பதைக் காண முடியும். கோதம் சமோரா மக்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள். அந்த இனமே இப்போது அழிந்தொழிந்து விட்டது.

அமைதியான மனோ நிலை அறப்பண்பின் ஒரு கூறு. வன்முறை வெற்றி தருவதாகத் தோன்றினாலும் இறுதியில் வாளோங்கியவனின் வாளுக்கு அவனே இரையாவதுண்டு.

தீய பழக்கங்களிலிருந்து விடுபட்டிருப்பது அறப் பண்பின் மற்றொரு கூறு. முப்பது வயதில் ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டவர்கள் அடுத்த 13-14 ஆண்டுகளில் இறந்து விடுவார்கள் என்றும் சீரான வாழ்வு வாழ்பவர்கள் 70 ஆண்டு வரை வாழ்கிறர்கள் என்றும் இங்கிலாந்து நாட்டின் புள்ளிவிவரம் ஒன்று கூறியது.

அறத்தின் வலிமையே உயர்ந்தது என்பதை விளக்குகிறார் டார்வின். பண்டைய கிரேக்கர்கள் இன்றைய ஐரோப்பியர்களை விட அறிவுத்திறனில் மேம்பட்டிருந்தார்கள் ஆனால் அவர்களது புத்திசாலித்தனமே அவர்களுக்குப் பகையாயிற்று.

தேசங்கள் செழித்து வாழ்வது அறத்தின் வலிமையாலேயே.

இதனை நினைவில் கொள்வோம். பிறருக்கு உபகாரமாக வாழ்வோம். அதுவே அறவாழ்வின் உச்ச நிலை.

அறநெறி

வாசித்ததை யோசிக்கிறேன்

அறநெறிச் சமயம்

மோ.க.காந்தி

6.அறமே சமயமாக….

அறமே சமயமாவதா? என்று புருவத்தை உயர்த்துபவர்கள் இருவகை.

சமயம் என்பது வெறும் நல்லொழுக்கம் என்பதை விட மிகவும் மேம்பட்டது என்பவர்கள் ஒரு சாரார். மனசு சுத்தமா இருந்து ஒழுக்கமாக வாழ்ந்தால் போதும்.. சாமி பூதம் மதம் எல்லாம் தேவையே இல்லை என்பவர்கள் ஒரு சாரார். இரண்டுமே தப்பு என்கிறார்கள் அறநெறிச் சமய இயக்கத்தினர்.

மத அனுஷ்டானங்களைத் தவறாமல் பண்ணிக்கொண்டு, ஆனால், நடத்தையில் ஒழுக்கக்குறைவாக இருப்பவர்களும் உண்டு.  சார்லஸ் பிராட்லா போல, சாமி, சமயம் இந்த சமசாரம் எல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு நல்லொழுக்க நெறிகளைத் தவறாமல் பின்பற்.றுபவர்களும் உண்டு. இரண்டுமே தவறு என்பதுதான் அறச் சமயத்தினரின் கருத்து அதிலும் கடவுள் மதம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு  முறைகேடாக நடந்து கொள்பவர்கள் சமூகத்துக்குக் கேடானவர்கள் என்கிறார்கள் அவர்கள். சமயமும் அறநெறியும்  ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தன என்று அறிவியல் ரீதியாக நிறுவத் தலைப்படுகிறார்கள்.   .

தெய்வத்தின் மேலுள்ள அச்சத்தின் காரணமாக, தானம் தர்மம் என்றெல்லாம் கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களைச் சமயப் பிடிப்பு உள்ளவர்கள் என்று சொல்ல முடியாது. தன்னிச்சையாக, மனப்பூர்வமாக, திட உறுதியுடன், லாபமோ நஷ்டமோ, வாழ்வோ தாழ்வோ, எது வந்தாலும், என்ன தியாகம் செய்ய வேண்டியிருந்தாலும் தர்ம நெறிப்படித்தான் ஒழுகுவேன் என்ற நிலைப்பாடு உடையவர்கள்தாம் உண்மையான ஒழுக்கசீலர்கள். கடவுளுக்கும் பிரியமானவர்கள்.

சிலர் அறநெறித் தத்துவங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள். ஊருக்கெல்லாம் உபன்யாசம் செய்வார்கள். ஆனால் தன் நலன் என்று வந்தபோது, தப்பாக நடந்துகொண்டால் என்ன என்று நினைத்துச் செயல்படுவார்கள். முஸோலினி அப்படித்தான். பள்ளி மாணவர்களுக்கெல்லாம் தர்ம்ம், நியாயம் என்றெல்லாம் விரிவாக உரை நிகழ்த்துவார். ஆனால் தன் நாட்டின் நலனுக்கு ஏற்றது என்று அவர் கருதியதற்காக, வேண்டாத கொடுமைகள் எல்லாம் செய்தார். இதன் காரனம் அவரது அறம் சமயம் சார்ந்திராதது.

 அறநெறிச் சமயம் நிறைவாகச் சொல்வது: உடைவாளை ஒளித்து வைத்துக்கொண்டு செய்யும் பிரார்த்தனைகளுக்கெல்லாம் கடவுள் செவிசாய்க்க மாட்டார். இரண்டு பேரை எடுத்துக்கொள்கிறோம். ஒருவர் கடவுளை முழுமையாக நம்புகிறார். மூன்று வேளை பூஜை செய்கிறார். ஆனால் சமயம் சொல்லும் போதனைகள் ஒன்றையும் கடைப்பிடிப்பதில்லை. மற்றவர், கடவுளின் பெயரைக்கூட உச்சரிப்பதில்லை. ஆனால் அவர் மனப்பூர்வமாகச் செய்யும் செயல்கள் அனைத்தும் இறைக் கட்டளைக்கு இசைந்தவையாக இருக்கின்றன. இவர்களில் யார் கடவுளுக்கு உகந்தவர்? பின்னவர்தானே?

இதே கருத்தைப் புனித விவிலியத்திலும், காஞ்சிப் பெரியவர்களின் ”தெய்வத்தின் குர’லிலும் படித்திருக்கிறேன்.

அனைத்துச் சமயங்கள் சொல்லும் அறநெறிக் கருத்துகள் ஒன்று போன்றவை என்ற “அறநெறிச் சமய “ இயக்கத்தினரின் கோட்பாடு சரியானதுதானே?

அறநெறி

புத்தகச் சுருக்கம்

அறநெறிச் சமயம்

மோ.க.காந்தி

3.நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்

மதத்துக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமில்லை; ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியமில்லை என்று பலர் நினைக்கிறார்கள். இது தவறான கருத்து. எந்த மதத்தை எடுத்துப் பார்த்தாலும் அதன் முக்கியமான பகுதியாக ஒழுக்கத்தை வலியுறுத்திச் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம்

எல்லாரும் செய்கிறார்களே? நாம் மட்டும் ஏன் செய்யக்கூடாது? என்று ஒழுக்கமற்ற செயலைச் செய்யக்கூடாது. நாம் மட்டுமே தனித்து நின்றாலும், உலகமே எதிர்த்து நின்றாலும், நமக்கு நியாயம் என்று படுவதை அச்சமின்றிச் செய்ய வேண்டும். ”எவ்வழி நல்வழி அவ்வழி நம்வழி”

தன்னலத்தை மட்டுமே பேணும் ஆசைகள் ஒழுக்கத்துக்குப் புறம்பானவையே. நம்மை நாம் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும் ,பிறருக்குத் தொடர்ந்து நல்லது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று கொள்ளும் ஆசைகளே ஒழுக்கத்தின் பாற்படும். நல்லது செய்வதில், ”அப்பா! இவ்வளவு செய்து விட்டோம்; இது போதும்” என்று சொல்லிக்கொள்வதற்கில்லை. அறம் செய விரும்பு; விரும்பிக்கொண்டே இரு!

எந்த்த் தொழில் செய்தாலும் பொய்யகலத் தொழில் செய்ய வேண்டும் .எந்தத் தனிநபரிடம் ,குடும்பங்களில் தீயொழுக்கம், பகை, பொய்ம்மை ஆகிய வித்துக்கள் தூவப்பட்டுள்ளனவோ,அந்தத் தனிநபர்,  குடும்பம் அழிவை எய்துவது திண்ணம்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம் என்றும் இடும்பைதரும், 

நல்லது செய்யும் முயற்சிகளே நல்லொழுக்கம். இந்தத் திற்வுகோலை வைத்துக்கொண்டு நல்லொழுக்கத் திரவியப்பேழையைத் திறப்போமானால், எடுத்துக் கொள்ள வேண்டிய பல நன்னெறிப் பொக்கிஷங்கள் இருப்பதைக் காணலாம்.

அறநெறி

 வாசித்ததை யோசிக்கிறேன்

அற நெறிச் சமயம்

மோ.க.காந்தி.

8. இலட்சிய சமுதாயம்.

அற நெறி என்பது சமூக உறவுகளோடு தொடர்பு கொண்டது.  உதாரணத்துக்கு நீதிபதிகள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகள், சமய, அரசியல், தத்துவார்த்த சார்பு நிலைகள் காரணமாக, நீதிக்குப் புறம்பான  தீர்ப்புகளை எழுதுவார்களேயானால், சமுதாயத்தில் அமைதி குலையும்.

 அன்பு, கருணை, தயை தேசபக்தி இவை அனைத்துமே சமுதாய உறவுகளுடன் தொடர்பு கொண்டவை. உண்மை என்பது தனி மனித அறம்; சமுதாயத்துக்கு அதனுடன் தொடர்பு இல்லை என்ற கருத்து தவறானது. தக்க நேரத்தில் உண்மை சொல்வது பிறருக்குத் தீங்கு நேருவதைத் தவிர்க்கும். உண்மையைச் சொல்லாமல் இருப்பது, அல்லது பொய்யைச் சொல்வது பிறருக்குத் தீங்கு விளைவிக்கும்.

‘சமுதாயம் சீர்கெட்டுவிட்டது; ஒன்றும் சரியில்லை’ என்றெல்லாம் திண்ணையில் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருப்பவர்கள், சமுதாயத்துக்கு மேலும் தீங்கு விளைவிக்கிறார்கள். சமுதாய அக்கறை உள்ளவர்கள் இருட்டைச் சபிக்காமல், தங்களால் இயன்ற அளவுக்கு அகல் தீபம் ஏற்றுகிறார்கள்.

எப்பொழுதும், தான், தன் நலன் என்று சிந்தித்துக் கொண்டிருப்பவன் விலங்கே அனையன். தன் குடும்பம், சுற்றம், ஊர், சமூகம், நாடு என்று அவனது அன்பு வட்டம் விரிய விரிய அவன் உயர் நிலை எய்துகிறான். “யாதும் ஊரே; யாவரும் கேளிர்”  “வஸுதைவ குடும்பம்” என்பது நிறை நிலை ஆகும்.

பக்கத்திருப்பவன் துன்பம் பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி என்றார் பாரதியார். பிறர் துயர் கண்டு உன் இதயம் ரத்தம் சிந்துகிறதா என்று சோதித்துப் பார்த்துக்கொள்ளச் சொன்னார் சுவாமி விவேகானந்தர். பிறர் துயர் கண்டு இரங்கி உதவாத வரை நாம் நம் மதப்பெருமை பேசிக் கொண்டிருப்பதெல்லாம் வியர்த்தமே.

சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும்  அவரவர் சூழ் நிலை காரணமாக அவரவர் கடமைகள், பொறுப்புகள் அமைந்துள்ளன. . பொறுப்புகளுக்கேற்றவாறு அதிகாரமும் வரையறுக்கப் பட்டுள்ளது.  இதில் உயர்வு தாழ்வு என்பது இல்லை. வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக் கடை வைப்பவரேனும் நேர்மை தவறாது நடக்க வேண்டும் என்பதே சமுதாய விதி.  “எனக்கு அமைச்சர் பதவி தந்து அழகு பார்த்தார் அம்மா, அல்லது ஐயா” என்பதெல்லாம் விவரம் புரியாமல் பேசுகிற பேச்சு.. அமைச்சர் ஆனவுடன், அல்லது அரசாங்கத்தில் சின்ன குமாஸ்தா ஆனவுடன், மக்களை விரட்ட தனக்கு அதிகாரம் கிடைத்து விட்டது போல் பாவித்துக்கொள்வது பேதைமை. என்பிலதனை வெயில் போல அறம் அவர்களைக் காயும்.

 நாட்டின் பிரதான தலைவன், தன்னை நாட்டின் பிரதான சேவகன் என்று கருதிக் கொள்வதே உயரிய பண்பு. 

அறநெறி

 வாசித்ததை யோசிக்கிறேன்.

அற நெறிச்  சமயம்.

மோ.க.காந்தி

9.தனி மனித ஒழுக்கம்.

நாம் இறை வெளிச்சத்தின் கதிர்களே. நாம் ஒவ்வொருவருமே இறைவனால் பிரத்தியேகமாகப் படைக்கப்பட்டவர்.... இறைப் படைப்பில் ஒன்று போல இரண்டாவது இல்லை. நமது தகுதிகள், திறமைகள், குறை நிறைகளுடன் வேறொருவர் இல்லை. எனவே இறைவன் படைப்பில் நமக்கென்று வகுக்கப்பட்ட பணியை, நமக்கே உரிய திறமையுடன் நிறைவாகச் செய்வதே நமது கடமை.

அற நெறிச் சமயம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். பிறர் நலம் பேண வேண்டும் பிறரைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதெல்லாம் சரியே. எனினும் நாம் நம்மைப்பற்றியும் சிந்திக்க வேண்டும். பிறரை மதிப்பதைப் போலவே நம்மை நாமே மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தன்னைப் பற்றிய உயர்வான சுய பிம்பம் இல்லாதவன், பிறருக்கு உதவுவது என்பதெல்லாம் நடைமுறைச் சாத்தியமல்ல. நாம் ஒவ்வொருவருமே தெய்விகத்தின் குழந்தைகள். எல்லையற்ற ஆற்றல் நம்முள் புதைந்து கிடக்கிறது. அதை முழுமையாகக் கொண்டு வர முயல்வதே நம் ஒவ்வொருவரின் கடமை.

முதலில் நமது தனிப்பட்ட ஒழுக்கம் முக்கியம். என் அந்தரங்கத்தில் நான் எப்படி இருந்தால் என்ன, அது சமுதாயத்தை எப்படிப் பாதிக்கும்  என்று கேட்பது சரியில்லை. நமது ஒழுக்கமின்மை நமது சிந்தனை, செயல்கள், சூழ் நிலைகளில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். தலைவன் தனிப்பட்ட முறையில் ஒழுக்கமின்றி இருந்தால், துதி பாடிகள் மட்டும் வேண்டுமானால் போற்றிப் பாடுவார்களே தவிர சமுதாயம் சீயென்றுதான் இகழும். இதில் மற்றொரு விஷயம் இருக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் மன நாயகன் எப்படி ஒழுகுகிறானோ, அதுவே அவன் தொண்டர்களுக்கும், பரவலாக ஒட்டு மொத்த சமுதாயத்துக்குமான நெறியாகி விடும்! மனிதப் பிறவியின் பொதுவான நோக்கம் ஒன்று இருக்கிறது. அது சமுதாயத்துக்குப் பயனுள்ளவராக வாழ்வது. இலட்சிய சமுதாயத்தை உருவாக்குவதில் ஒவ்வொருவரும் அவரவர்க்கேற்ற வகையில் பங்களிக்க முடியும்.

வணிகர் தாம் விற்பவற்றின் தரம் குறையாது பார்த்துக் கொள்ள வேண்டும். கொள்வதும் மிகை கொளாது,கொடுப்பதும் குறைகொடாது நேர்மையாக வணிகம் செய்ய வேண்டும். இதே போல வக்கீல்கள், மருத்துவர்கள்,  அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் அவரவர் பணியில் மக்களின் நலத்தை முன்னிறுத்திப் பணியாற்றினால் சமுதாய மாற்றம் நிகழக்கூடியதே. “நீ விரும்பும் மாற்றம் உன்னில் நிகழட்டும்.” ஊரே ஒழுங்கில்லாமல் இருக்கும் போது நான் மட்டும் ஒழுங்காயிருந்து என்ன பிரயோசனம் என்பது நமது சுய நலத்துக்கான சமாளிப்புக் கவசமே.

நிறைவாகச் சொல்ல வேண்டுமானால்—

யார் உண்மையாக நடந்து கொள்கிறானோ,

யாருக்கு எவரிடத்தும் துவேஷம் இல்லையோ,

யார் வேறு எவரையும் சுரண்டிப் பிழைக்கவில்லையோ,

யார் மனம் தூய்மையாய் இருக்கிறதோ-

அவனால்தான் மனிதகுல மேம்பாட்டுக்குப் பங்களிக்க முடியும்..

அவனே மகிழ்வானவன்.

அவனே செல்வந்தன்.

அவனே உண்மையான சமயவாதி

.( நிறையும்.)

அறநெறி

 வாசித்ததை யோசிக்கிறேன்.

அறநெறிச் சமயம்

மோ.க.காந்தி.

5.அறம் வெல்லும்; பாவம் தோற்கும்.

நாம் அடிக்கடி ஒரு செயல் நல்லதா தீயதா என்று தீர்ப்பு சொல்கிறோம். அந்தச் செயல் நமக்கு நன்மை தரலாம், தீமை செய்யலாம் அல்லது நம்மை எந்தவிதத்திலும் பாதிக்காமல் இருக்கலாம். நமக்கு நன்மை செய்தால் அதை ஏற்றுக்கொண்டாலும் கூட, நம் மனம் சொல்லும் தீர்ப்பு-அது தீய செயல் என்று.

ஆக ஒரு செயல் நல்லதா தீயதா என்பது நமது சொந்த நலனைப் பொறுத்ததல்ல.நமது விருப்பத்தையும் பொறுத்ததல்ல. அபிப்பிராயங்கள் அவ்வப்போது மாறலாம். ஆனால் தர்மத்தின் விதிகள் மாறவே. மாறா.  யார் இயற்றிய விதிகள் அவை? பிரபஞ்ச  விதிகள்!

அரசாங்கத்தின் விதிகள் உள்ளன. . அரசாங்கச் சட்டத்தை மீறுவேன்; அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லலாம். ஆனால் யாரும் தர்மத்தை மீறுவேன்; பொய் சொல்லுவேன் என்பது போல மனமாரச் சொல்ல முடியாது. தர்மத்தை மீறி விட்டு அதை வெளியில் நியாயப்படுத்தலாமே தவிர, மனத்தின் குரலை அடக்கி விட முடியாது. அதனால்தான் சொன்னார் திருவள்ளுவர்,

,”தன் நெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின்

 தன் நெஞ்சே தன்னைச் சுடும்” என்று.

கொடுங்கோல் அரசன் அநீதியாகச் செயல்படலாம். பேய் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள். கற்றறிந்தோரும், நீதிநெறிகளை  நன்குணர்ந்தவர்களும், மௌனமாய் இருக்கலாம் “தீங்கு தடுக்கும் திறமில்லேன்” என்று  தன்னிரக்கப் படலாம்,. அதற்காக  அதர்மம். தர்மம் ஆகி விடுவதில்லை..

அற எது என்பது மாறாத தெய்வ நீதி என்பது மட்டும் அல்ல. ”அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்பதும் தெய்வ நீதியே.

“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;

தருமம் மறுபடி வெல்லும்” எனு மியற்கை

மருமம்”

என்றான் பாரதி.

Tuesday, 6 January 2026

அறநெறி

 


புத்தகச் சுருக்கம்.

அறம்சார் சமயம்.

மோ.க.காந்தி


1.அறிமுகம்

உலகில் பொய்யொழுக்கம் மலிந்து விட்டது. சமயம் சமயம் என்கிறார்கள். அதன் புற வடிவைக் கடைப்பிடிக்கிறார்களே அன்றி, அது கூறும் நீதிநெறி விதிகளை விட்டு விடுகிறார்கள். பலரும் என்ன சொல்லி விவாதிக்கிறார்கள்? சமயம் என்பது எல்லாம் உண்மையாய் இருந்தால் உலகில் ஏன் இத்தனை அக்கிரமமும் அநீதியும் நடக்கின்றன?  இந்த வாதம் தவறு என்பது கண்கூடு. வேலையை ஒழுங்காகச் செய்யாதவன், தனது கருவிகளைக் குறை சொல்வான் என்பது போலத்தான் இது. மதம் எல்லாம் மோசடி என்று சொல்லி விட்டு அது சொல்லும் அறநெறிகளைக் கடைப்பிடிக்காமல் நம் இஷ்டம் போல் நடந்துகொண்டு மதத்தைக் குறை சொன்னால் எப்படிச் சரியாகும்?

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அறிஞர்கள் சிலர் எல்லா மதத்தையும் ஆராய்ந்து அனைத்து மதங்கள் சொல்லும் நீதி நெறிகளையும் ஒன்று திரட்டினார்கள். அதற்கு அறநெறிச் சமயம் என்று பெயரிட்டார்கள். இந்தக் கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள் தங்கள் தங்கள் மதத்திலேயே இருக்கலாம். குறிப்பாகத் தங்கள் மதம் சொல்லும் தர்ம தத்துவங்கள வழுவாமல் கடைப்பிடிக்க வேண்டும். மனிதன் மதங்கள் சொல்லும் அடிப்படை நீதிகளைக் கடைப்பிடிக்காமல் போனால், சமுதாயம் நிலைகுலைந்து இறுதியில் அழிந்துபோகும் என்பது கோட்பாடு.

இந்தக் கருத்தை வைத்து சால்ட்டர் என்ற கற்றறிந்த அமெரிக்கர் ஒரு நூலை எழுதினார் .இது 1889 ல் அமெரிக்கப் பகுத்தறிவுப் பத்திரிகையாளர் சங்கத்தால் வெளியிடப்பட்டது. அதைத் தழுவியதே காந்திஜி எழுதிய இந்தப் புத்தகம்.

(தொடரும்)


அறநெறி..

 Ethical Religion by M.K.Gandhi

Morality as a religion.(Extracts)

Morality and religion have close relationship. There are some people who proclaim themselves as religious but indulge in all types of immoral acts. On the other hand, there are avowed atheists like Charles Bradlaugh who never deviate from principles of morality.  Both these categories of people consider that religion has nothing to do with morality. Both are wrong. But the former are dangerous to society.

There are people who tread the path of morality consciously, deliberately with a determined will, regardless of gain or loss, of life or death, without turning to look back, ready to sacrifice themselves. They can be really said to have been permeated with true morality.

Morality cannot subsist without the support of religion. Bismarck perpetrated dreadful deeds in the interest of Germany. His education and values of morality vanished in the face of difficulties. This is just because his concept of morality was not grounded in religion. Thus it will be seen that true or ideal of morality ought to include true religion. In other words, morality cannot be observed without religion.

Furthermore, it is seen that rules of morality laid down in world’s great religions are largely the same.

God will not come to help us if we utter His name while having a dagger concealed under our arm.

Of two men, one who believes in the existence of God, yet breaks all His commandments; and the other, who, though not acknowledging God by name, worships Him through his deeds, and obeys His laws, recognizing the Divine Maker in His laws- the latter alone can be  considered religious and moral.

அறநெறி..

 Book-Digest 

Ethical Religion

By M.K.Gandhi

Introduction:

Ethics tells us what the world ought to be. It enables man to know how he should act.  It is necessary to know about the evil effects of injustice, wickedness vanity and the like and the disaster they spell when the three are found together. Mere knowledge is not enough. It should be followed by appropriate action.

  If a man does a good deed, he does not do it to win applause. He does it because he must. For him doing good is a higher kind of food. If someone should give him an opportunity to do a good deed, he would feel grateful just as a starving man would be grateful to the giver of food and bless him.

Ideal Morality.

 Anyone who observes the laws of morality for their own sake and not for any selfish end can be regarded as religious. When we know a particular path to be right one, we should set out on it without fear. We can progress only if we observe the laws of morality in this way. True morality, true civilization and true progress are always found together. If we take out the essence of all moral laws, we shall find that the attempt to do good to all mankind is the highest morality. If we open the treasure house of morality, we shall find in it all the other principles.

What is a moral act?

 A moral act must be our own act. It must spring from our own will. If we act mechanically, there is no moral content in our act. To illustrate, it may be moral of a king to pardon a culprit. But the messenger carrying the order plays only a mechanical part in the king’s moral act.

It is not enough if the act done is good. It must be done with the intention to do good. Emperor Alexander, wherever he went in the course of his conquest, he took Greek language and Greek culture, art and manners.  But the intention of Alexander behind all this was only conquest and renown. His was not a moral act.

It is not enough if a moral act to have been done with a good intention, but it should have been done without compulsion. There is no morality in my act, if I rise early out of the fear that if I am late for my office, I may lose my situation. Likewise it is only selfish, and not moral, of an employer to sympathize with his employees or to pay them higher wages lest they leave him.

For an action should be considered moral, there should be no self interest behind it. That is not to say that actions prompted by self interest are worthless. But they are not moral acts.

 (To be continued)


அறநெறிச்சமயம்

 Book Condensation

Ethical Religion by M.K.Gandhi.

 The Higher Law 

There are some acts which are good and some which are bad. Sometimes certain bad acts may benefit us, or we may have sympathy for the wrong doer. This does not alter the fact that a certain act is bad.

Moral laws are immutable. Sometimes, in the absence of proper light on the facts, we may consider a bad act as good. But once we have information, we will understand that the act is bad. So our opinions do not change the nature of an act.

  Generally men lack objectivity. Often prompted by personal considerations, people may classify an immoral act as moral. We are yet to find a disinterested student of morality, patient and painstaking, who, setting aside his earlier superstitious notions, devotes his life to seeking only the ideal good.  We may not, for a time, arrive at unanimity of opinions regarding moral laws. This does not however mean that we cannot distinguish between what is right and what is wrong. Thus, we see that in spite of individual’s likes and wishes, there is a moral standard which is called moral law. This has to be obeyed. A man may protest against a State Law and choose to disobey it and accept punishment. But there is no question of protesting against the moral law, and saying it is not necessary to adhere to truth and one may lie. Even a man practicing immorality is bound to admit that what he is doing is immoral (even though he may not openly concede it.)

 A moral law does not change   because of custom or public opinion. A moral man may continue to be moral even though the public opinion is totally against him.  Even if the State passes an act making an immoral act moral, it does not change the Divine Law. As Robert Browning said, “If ever Satan proclaimed the law of hatred and untruth in the world, even then justice, goodness and truth will continue to be divine.” Thus the moral law is Supreme and Divine.

No people or individual can violate this law to the end of time.  There are instances of States having been broken and destroyed due to immorality.

The mysterious moral law brings prosperity to the man who observes it; it sustains the family that obeys it; and the community that lives by it ever flourishes. Freedom, peace and happiness are the lot of the nation that lets itself be ruled by this highest law.

இந்திய...2

 காந்திஜி 1909ல் எழுதிய இந்திய சுயரஜ்யம் என்ற புத்த்கத்திலிருந்து சில பகுதிகள்-1

பாராளுமன்றங்களின் தாய் என்று சொல்லப்படுகிற பிரிட்டிஷ்  பாராளுமன்றம் ஒரு மலடி; விலைமகள். கடுமையான வார்த்தைகள். என்றாலும் இதுதான் உண்மை. மிகச் சிறந்தவர்களையே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. மெம்பர்கள் ஊதியமில்லாமல் வேலை செய்கிறார்கள். எனவே அவர்கள் பொது நலத்துக்காக உழைக்கிறார்கள் என்று அனுமானித்துக் கொள்கிறோம். வாக்காளர்கள் கற்ற்றிந்தவர்கள். எனவே அவர்கள்  தவறாகத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்றும் கருதுகிறோம். அத்தகைய மன்றத்துக்கு மனுக்களின் குவியலோ அல்லது அழுத்தங்களோ தேவையில்லை.  அதன் பணி சீராக நடக்க வேண்டும். இது அதன் அன்றாட நடவடிக்கைகள் மூலம் வெளிப்படையாகத் தெரிய வேண்டும். ஆனால் வாஸ்தவத்தில், பொதுவாகவே உறுப்பினர்கள் கபடஸ்தர்கள் என்பதும் சுய நல வாதிகள் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகி விட்டது. ஒவ்வொருவரும் தங்கள் அற்ப நலனைப் பற்றியே சிந்திக்கிறார்கள். அச்சம் என்பதே அவர்கள் உந்து சக்தி. இன்றைக்கு செய்யப்படுவது, நாளைக்கு அழிக்கப்படலாம். பாராளுமன்றத்தின் செயல்பாட்டில் முடிந்தமுடிவு என்று நிரணயிக்கக்கூடிய ஒற்றைச் சம்பவத்தைக் கூடக் காண முடியவில்லை. மிக முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும்போது உறுப்பினர்கள் சாய்ந்து கொண்டு உறங்கி விழுவதைப் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் உறுப்பினர்கள் கேட்பவர்களுக்கு அலுத்துப்போகும் வரையில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கார்லைல் பாராளுமன்றத்தை உலகத்தின் பேச்சுக்கடை என்று விவரித்தார். கட்சி சொல்படி உறுப்பினர்கள் கொஞ்சமும் யோசிக்காமல் வாக்களிக்கிறார்கள். கட்டுப்பாடு!  யாராவது ஒருவர், மாறுதலாக, சுயமாக வாக்களித்து விட்டால், அவர் துரோகி எனப்படுகிறார். பாராளுமன்றத்துக்காகச் செலவிடுகிற பணம், நேரம், சில நல்ல மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால்  இங்கிலாந்து மிக உயரிய இடத்தை அடைந்திருக்கும். பாராளுமன்றம் தேசத்தின் விலை அதிகமான விளையாட்டுப் பொம்மை. இது என் கருத்து மட்டுமல்ல. பல அறிஞர்களும் சொல்லியிருப்பதே. ஒருவர் சொல்கிறார், உண்மையான கிறிஸ்தவன், பாராளுமன்ற உறுப்பினன் ஆக மாட்டான் என்று. இன்னொருவர் சொல்கிறார், பாராளுமன்றம் ஒரு பச்சைக்குழந்தை. 700 ஆண்டு வரலாற்றுக்குப் பின்னும் அது குழந்தையாகவே இருந்தால் அது எப்போது வளரப் போகிறது.?

அதனால்தான் பாராளுமன்றம் மலட்டுத்தன்மை உடையது என்று சொல்லப்படுகிறது. 

அது சரி. அது எப்படி விலைமகள் ஆகும்?

(கேட்கலாம் தொடர்ந்து) 

இந்திய சுயராஜ்யம்

 காந்திஜி 1909ல் எழுதிய இந்திய சுயரஜ்யம் என்ற புத்த்கத்திலிருந்து சில பகுதிகள்-1

பாராளுமன்றங்களின் தாய் என்று சொல்லப்படுகிற பிரிட்டிஷ்  பாராளுமன்றம் ஒரு மலடி; விலைமகள். கடுமையான வார்த்தைகள். என்றாலும் இதுதான் உண்மை. மிகச் சிறந்தவர்களையே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. மெம்பர்கள் ஊதியமில்லாமல் வேலை செய்கிறார்கள். எனவே அவர்கள் பொது நலத்துக்காக உழைக்கிறார்கள் என்று அனுமானித்துக் கொள்கிறோம். வாக்காளர்கள் கற்ற்றிந்தவர்கள். எனவே அவர்கள்  தவறாகத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்றும் கருதுகிறோம். அத்தகைய மன்றத்துக்கு மனுக்களின் குவியலோ அல்லது அழுத்தங்களோ தேவையில்லை.  அதன் பணி சீராக நடக்க வேண்டும். இது அதன் அன்றாட நடவடிக்கைகள் மூலம் வெளிப்படையாகத் தெரிய வேண்டும். ஆனால் வாஸ்தவத்தில், பொதுவாகவே உறுப்பினர்கள் கபடஸ்தர்கள் என்பதும் சுய நல வாதிகள் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகி விட்டது. ஒவ்வொருவரும் தங்கள் அற்ப நலனைப் பற்றியே சிந்திக்கிறார்கள். அச்சம் என்பதே அவர்கள் உந்து சக்தி. இன்றைக்கு செய்யப்படுவது, நாளைக்கு அழிக்கப்படலாம். பாராளுமன்றத்தின் செயல்பாட்டில் முடிந்தமுடிவு என்று நிரணயிக்கக்கூடிய ஒற்றைச் சம்பவத்தைக் கூடக் காண முடியவில்லை. மிக முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும்போது உறுப்பினர்கள் சாய்ந்து கொண்டு உறங்கி விழுவதைப் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் உறுப்பினர்கள் கேட்பவர்களுக்கு அலுத்துப்போகும் வரையில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கார்லைல் பாராளுமன்றத்தை உலகத்தின் பேச்சுக்கடை என்று விவரித்தார். கட்சி சொல்படி உறுப்பினர்கள் கொஞ்சமும் யோசிக்காமல் வாக்களிக்கிறார்கள். கட்டுப்பாடு!  யாராவது ஒருவர், மாறுதலாக, சுயமாக வாக்களித்து விட்டால், அவர் துரோகி எனப்படுகிறார். பாராளுமன்றத்துக்காகச் செலவிடுகிற பணம், நேரம், சில நல்ல மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால்  இங்கிலாந்து மிக உயரிய இடத்தை அடைந்திருக்கும். பாராளுமன்றம் தேசத்தின் விலை அதிகமான விளையாட்டுப் பொம்மை. இது என் கருத்து மட்டுமல்ல. பல அறிஞர்களும் சொல்லியிருப்பதே. ஒருவர் சொல்கிறார், உண்மையான கிறிஸ்தவன், பாராளுமன்ற உறுப்பினன் ஆக மாட்டான் என்று. இன்னொருவர் சொல்கிறார், பாராளுமன்றம் ஒரு பச்சைக்குழந்தை. 700 ஆண்டு வரலாற்றுக்குப் பின்னும் அது குழந்தையாகவே இருந்தால் அது எப்போது வளரப் போகிறது.?

அதனால்தான் பாராளுமன்றம் மலட்டுத்தன்மை உடையது என்று சொல்லப்படுகிறது. 

அது சரி. அது எப்படி விலைமகள் ஆகும்?

(கேட்கலாம் தொடர்ந்து) 

Monday, 5 January 2026

சர்வோதயம்-4

  படித்ததில் புரிந்தது-4

சர்வோதயம்

மோ.க.காந்தி

உண்மையின் வேர்கள்(3)

இன்னோர் எளிய உதாரணம். ராணுவத் தலைவருக்கும் போர் வீர்ருக்கும் இடையேயான உறவு.. படை மிகப் பயனுள்ள வகையில் செயல்பட வேண்டும், தனக்கு எந்தக் கஷ்டமும் வரக்கூடாது என்ற நோக்கத்துடன் தலைவன் “ராணுவக் கட்டுப்பாட்டை”ச் செயல்படுத்துவான் என்றால், சுய நல நோக்கம் காரணமாக, அவனால் வீர்ர்களின் முழுத்திறமையையும் வெளிக் கொணரவோ,அவர்களது வளர்ச்சிக்கு உதவவோ, முடியாது. ஆனால் அவன் வீர்ர்களுடன் நேசத் தொடர்பு வைத்திருந்து, அவர்களது நலனில் முழுமையாக அக்கறை செலுத்தி, அவர்களது உயிருக்கு மதிப்புக் கொடுப்பவனாய் இருந்தால், அவன் மீதுள்ள அன்பின் காரணமாக, அவனது பண்பின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக, அவர்களது முழுத் திறமையும் பரிமளிக்கும். இதைத் தவிர சிறந்த சாதனைக்கான வேறு வழி எதுவும் கிடையாது, வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள இடங்களில் இது மேலும் தெளிவாக விளங்கும்.  வீர்ர்கள் தலைவனை வெறுத்திட்ட போதிலும் தாக்குதல்கள் வெற்றி அடையலாம். ஆனால் போரில் வெற்றி என்பது, தலைவனுக்கும் செயல்வீர்ர்களுக்கும் இடையே நேசத்தொடர்பின்றி விளைந்தது கிடையாது

(தொடரும்)


.

சர்வோதயம்-3

 படித்ததில் புரிந்தது-3.

சர்வோதயம்

மோ.க.காந்தி

உண்மையின் வேர்கள் (2)

 நீதி அல்லது நியாயம் என்பதில் சர்வோதயத் தத்துவம் பரிவு என்பதை உள்ளடக்குகிறது.

ஒரு குடும்பத்தலைவருக்கும் இல்லப் பணியாள் ஒருவருக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்கொள்வோம். அவர்களுக்குள் ஒப்பந்தம்-பணியாள் முழு நேரம் வேலை செய்ய வேண்டும். கொடுக்கக்கூடிய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு விட்டது. தலைவர் சவுக்கை வைத்து வேலை வாங்குவது போல துளிக்கூட ஓய்வில்லாமல்  பணியாளிடம் வேலை வாங்குகிறார்.. பணியாள் குறைந்த கூலிக்கே வேலை செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். சட்டம் “நீதி”ப்படி இதில் தவறில்லை. கட்டுபடியாகவில்லை என்றால் எந்த நேரமும் பணியை விட்டு விலகி விட அவருக்கு உரிமை இருக்கிறது .”ஆரசியல்-பொருளாதார” தத்துவப்படி இது சமுதாயத்துக்கு நல்லதே. பணி மிக அதிக அளவில் நடக்கிறது. சமுதாயம் பலனடைகிறது. அந்த சமுதாயத்தில் பணியாளரும் அடக்கம். இது மிகச் சரியே. பணியாளர் ஓர் இயந்திரமாக இருந்தால். எண்ணங்களும் உணர்ச்சிகளும் அற்ற ஜடமாக இருந்தால். இப்போது குறிப்பிட்டுள்ள சூழ் நிலையில் அதிக பட்ச உழைப்பை எதிர்பார்க்க முடியும் என்பது நடவாததே. பரஸ்பரம் பரிவு என்ற உந்து சக்தி இருந்தாலே அதிக பட்ச பலனை எதிர்பார்க்க முடியும்.

தலைவன் வழவழ கொழகொழ ஆசாமியாகவும், பலவீனனாகவும் இருந்தால், பலன் சொற்பமாகவே இருக்கும்-பணியாளனுக்குப் பணியின் மீதும் முதலாளியின் மீதும் அக்கறையும் பரிவும் இல்லாதிருந்தால். நாம் சொன்ன பரிவு என்பதே அவனது உந்து சக்தியாக இருந்தால் மட்டுமே அதிக பட்ச பலன் கிட்டும். சுருங்கச் சொல்லின், தன்னலமற்ற விதத்தில் அடுத்தவரைப் பரிவுடன் நடத்துவது மட்டுமே நிறையப் பலன் கொடுக்கும். இப்படிச் சொல்கையில், பரிவு அதிகப் பலன் தரும் என்பதைத்தான் இங்கே கூறுகிறோமே, தவிர, அதனுடைய மேன்மையையும் விரும்பத்தக்க தன்மையையும் பற்றிப் பேசவில்லை. பணியாளரிடம் சக்கையாக வேலை வாங்க வேண்டும் என்ற கருத்துடன் அவரிடம்”பரிவு” காட்டுவீர்களானால், அவரிடமிருந்து விசுவாசத்தையோ, நீங்கள் விரும்பும் பலனையோ அடைய முடியாது. பொருளாதார நோக்கம் எதுவும் இல்லாமல் அவரை அன்புடன் நடத்துங்கள். பொருளாதா ரீதியிலும் நல்ல பலனே கிட்டும். “தோற்பவர் வெல்கிறார்; வெல்பவர் தோற்கிறார்”

சர்வோதயம்-2

 படித்ததில் புரிந்தது-2.

சர்வோதயம்

மோ.க.காந்தி

உண்மையின் வேர்கள்-1.

ஒரு குடும்பம். தாயார். குழந்தைகள். ஒரே ஒரு ரொட்டித்துண்டு இருக்கிறது. தாயார் குழந்தைகள் இரண்டு பக்கமுமே பட்டினி. தாயார் சாப்பிட்டால் குழந்தைகள் பசியோடு இருக்கும். குழந்தைகள் சாப்பிட்டால் தாயார் பட்டினியாய் வேலைக்குப் போக வேண்டியிருக்கும். ஆக, இரண்டு பக்க நலன்களும் வேறுபட்டவை. இதனால், தாயாரும் குழந்தைகளும் விரோதிகள் என்று சொல்லலாமா? தனது வலிமை காரணமாக, குழந்தைகளுக்கு இல்லாமல் தாயார் ரொட்டியைச் சாப்பிட்டு விடுவாளா?

இதே போலத்தான் இரண்டு தரப்புகளுக்குள் நலன்கள் வேறுபடுவதால் விரோதம் என்பதோ, வலிமை அல்லது சூழ்ச்சி காரணமாக ஒருவரை ஒருவர் ஏய்க்க வேண்டும் என்பதோ. இல்லை.

முதலாளி, தொழிலாளி என்ற இரண்டு தரப்பை எடுத்துக் கொள்வோம்... பணி சிறப்பாக வேண்டும் என்பதும், பொருள்கள் நியாயமாக விலை போக வேண்டும் என்பதும் இரு தரப்பின் நலனுக்கும் உகந்தவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், லாபத்தைப் பங்கு போட்டுக் கொள்வது?  இதில் ஒருவர் லாபம் மற்றவருக்கு நஷ்டமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஊழியர்களுக்கு ஊதியத்தைக் குறைவாகக் கொடுத்து விட்டு, அவர்கள் அசௌக்கியமாகவும், மனமொடிந்தும் காணப்பட்டால் அது முதலாளியின் நலனுக்கு உகந்ததல்ல. அதே போல மிக அதிகமாக ஊதியம் பெற்றுக்கொண்டு, முதலாளி தொழிலை நல்லபடி நடத்தமுடியாமல் போனால், தொழிலாளிக்கு அது ஏற்றதல்ல.

ஆகவே எப்படிச் செயல்படுவது என்பது அவ்வப்போதைய சௌகரியத்தை உத்தேசித்து அல்லாமல், எது நியாயம் என்பதன் அடிப்படையில் அமைய வேண்டும். ஒரு செயல்பாட்டின் விளைவு எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆனால் எது தர்மம், எது அதர்மம் என்பதை எல்லாரும் அறிவர். நம்மில் பெரும்பாலோருக்கு, தர்மத்தின் விளைவு, மிகச் சிறந்ததாகவே இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அதுதான் இறைவனின்  நீதி.

எனவே நடந்து கொள்ள வேண்டிய முறை தர்மத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, வலிமையையும், சூழ்ச்சித் திறனையும் ஒட்டி அமையக்கூடாது. அப்போதே அனைவருக்கும் நல்ல விளைவுகள் கிட்டும்.

(தொடரும்)

சர்வோதயம் -1

 படித்ததில் புரிந்தது.

சர்வோதயம்

மோ.க.காந்தி

1.அறிமுகம்.

பெரும்பாலானவர்களின் மகிழ்ச்சிக்காக உழைப்பதுதான் மனிதனின் கடமை என்பது மேலை நாட்டினரின் கருத்து. அவர்களைப் பொறுத்தவரை சந்தோஷம் என்பது சௌகரியமான வாழ்க்கை .நிறையப் பணம். பெரும்பான்மையானவர்களின் சந்தோஷமே நோக்கம் என்பதனால் சிறுபான்மையானவர்கள் சுரண்டப்படுவதில் தவறில்லை என்பது அவர்கள் கருத்து.  இந்த சந்தோஷத்துக்காக அற நெறிகளை மீறுவதில் எந்தத் தப்பும் இல்லை என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இந்தியாவிலும் நாம் அவர்களைக் காப்பியடிக்கத் தொடங்கி விட்டோம். மேலை நாட்டவரின் நல்ல விஷயங்களைப் பின்பற்றுவதில் தவறில்லைதான். என்றாலும் அவர்களின் நிலைப்பாடுகள் பொதுவாகத் தவறானவையாகவே இருக்கின்றன.

, அற நெறிகளைப் புறம் தள்ளி விட்டு,,சௌகரியம், பணம் இவற்றின் பின் ஓடுவது தெய்வ நீதிக்கு எதிரானது என்பதுதான் உண்மை .இந்தக் கருத்தை முன்வைத்து, ஜான் ரஸ்கின் என்ற மேலை நாட்டவர் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூலை எழுதினார். இந்தப் புத்தகத்தால் பெரிதும் கவரப்பட்ட காந்திஜி அதன் சுருக்கமாக, சர்வோதயம் என்ற தலைப்பில் சில கட்டுரைகளை வரைந்தார். அதுவே நூலானது.

இந்த நூலில் உள்ள கருத்துகள் மிகவும் நுட்பமாகவே இருப்பதால், நான் புரிந்து கொண்ட வரையில் சிறு சிறு கட்டுரைகளாக அவற்றைத் தமிழில் தர முனைகிறேன்.

பூனை பாற்கடலை நக்குபுக்க கதைதான். ஆசைபற்றி அறையலுற்றேன்.

Sunday, 4 January 2026

வெற்றியாளன்

 வெற்றியாளன்-தோல்வியாளன்—பாரதியார் என்ன சொல்கிறார்?


மனதில் எதைப்பற்றித் தீவிரமாகச் சிந்தித்து விரும்புகிறோமோ அது நிச்சயமாக நிறைவேறும். (Intense longing).

வெற்றியாளனின் செயல்பாடு இத்தகையதே.


தோல்வியாளன் கதை எப்படி?


ஏப்போதும் தாழ்வான சிந்தனை, மனச்சோர்வு, ஒரு நிலையான இலட்சியத்தில் உறுதியில்லாமல் மாறி மாறி அலைபாய்வது, ஒரு வேலையை எடுத்துக்கொள்ள முனையுமுன்னே, இடையூறுகளை எண்ணிக் கைவிட்டு விடுதல்,-இப்படியானவர்கள் குறிக்கோளை அடைய மாட்டார்கள்.


அவர்களது செயல்பாடு எப்படி இருக்கும்? 


“என் விதி” என்று நொந்து கொள்வார்கள். “அவன் பேச்சைக் கேட்டதனால்தான் இப்படி நடந்தது“ என்று நண்பர்கள் மீது குற்றம் சுமத்துவார்கள்.


அவன் எனக்குப் பரம விரோதி. சதி செய்து எனக்குத் தீங்கு செய்து விட்டான்” என்று இன்னொரு பலிகடாவைத் தெடுவார்கள்.


யாரைக் கெடுத்தாவது தன் வெற்றி பெற வேண்டும் என்று சூழ்ச்சிகளில் இறங்குவார்கள்.


வாயால் வடை சுட்டுக்கொண்டு காரியத்தில் இறங்காததற்கு  ஏதாவது நொள்ளை சாஸ்திரத்தை ஆதாரம் சொல்வார்கள் 


 தினம் தினம் ஜாதகக் கட்டைத் தூக்கிக்கொண்டு எந்த நேரத்தில் தொடங்கினால் காரியம் வெற்றி பெறும் என்று ஆராய்ந்து கொண்……..டே,,,,, இருப்பார்கள்.



 ‘கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை. நான் மூன்று வேளை ஸ்நானம் செய்கிறேன்; நாலு வேளை பூஜை செய்கிறேன்;அபிஷேகம் பூஜை என்று வாரி இறைக்கிறேன்; ஒரு பலனும் இல்லை. அவனைப் பாருங்கள் ;ஸ்வாமி நினைப்பே இல்லை. வெற்றி மீது வெற்றியாக வாரிக் குவிக்கிறான் என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள்.


ஒன்றை மட்டும் அவர்கள் மறந்து விடுகிறார்கள்.


ஒருமித்த சிந்தனை ,சோர்வு வாராத மனத்திட்பம்தான் வெற்றிக்கனியைத் தரும் என்பது புரியாமல் கண்ணிழந்தவன் காட்டில் திரிவதுபோல,அலைந்து அலமருகிறார்கள்.


பாரதியார் பாடலைப் பார்ப்போம்;


..சூழு மாய வுலகினிற் காணுறும்

தோற்றம் யாவையும் மானத மாகுமால்

ஆழு நெஞ்சகத் தாசையின் றுள்ளதேல்,

அதனு டைப்பொருள் நாளை விளைந்திடும்.

தாழு முள்ளத்தர், சோர்வினர், ஆடுபோல்

தாவித் தாவி பலபொருள் நாடுவோர்

வீழு மோரிடை யூற்றினிக் கஞ்சுவோர்

விரும்பும் யாவும் பெறாரிவர் தாமன்றே.


விதியை நோவர்,தம் நண்பரைத் தூற்றுவர்,

வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர்,

சதிகள் செய்வர்,பொய்ச் சாத்திரம் பேசுவர்

சாத கங்கள் புரட்டுவர் பொய்ம்மைசேர்

மதி யினிற்புலை நாத்திகங் கூறுவர் ;

மாய்ந்திடாத நிறைந்த விருப்பமே

கதிகள் யாவும் தருமென லோர்ந்திடார்;

கண்ணி லாதவர் போலத் திகைப்பர்காண்!


(கனவு-12,13)

ஜ!ப்பா

 ஜிப்பாவும் வேட்டியுமே சீருடையாய் நானேற்றேன்

ஜிப்பெங்கும் சிக்காது தொந்திபட்டன்---டப்பென்(று)

உடைந்து தெறிக்காது சௌகரியம் ஆதலினால்

உடையென்று கொண்டு விட்டேன்.

வேள்வி

 வேள்வி

உமா-60கள்

நிற்க நிதானிக்க

நினைவென்னும் தவம் புரியச்

சற்றும் இடமில்லாச்

சந்தடியில் சிறுபொழுது.


பரபரப்பு  மற்றுமொரு

பரபரபரப்பை விழுக்குமுனர்

பெருமூச்சாய்ச் சிந்தனையைப்

புரட்டிடவோர் அவகாசம்.


ஊணுறக்கம் சப்பென்ற

உத்தியோகம் நெறியென்றால்

மானுடத்துக் கென்னபயன்

மாபாவி வாழ்க்கையினால்?


ஒருகணம் இவ்வேதனைதான்

உலுக்கும்;மற்றோர் எண்ணம்

புரளும்;புது உற்சாகம்

பூரிப்புக் கரைகாணும்!

இன்பதுன்பச் சுவைமிக்க 

இவ்வுலகப் பூரனத்தில்

என்பங்கோ கர்மமெனும் 

ஏகாந்தப் பெருவேள்வி! 

கவிஞர் திருலோக சீதாராம் இந்தக்கவிதையைத் தன் கணீர்க் குரலில் பாடிச் சிறப்பித்தது பெருமையுடன் நினைவுக்கு வருகிறது. 

கவிதை எழுதிக் கிறுக்கு

 வேலைக்குப் போகாமல் வேலைவெட்டி இல்லாமல்

காலத்தைப் போக்குவது கண்டிப்பாய்-ஏலாது

நண்பாஉன்  சிந்தனைக்கு ஓர்வார்த்தை ஈற்றடிக்கு

வெண்பா எழுதிக் கிறுக்கு. 

வீண் அவஸ்தை

 வீண் அவஸ்தை

(திருச்சித் தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டுமலர்-1960)

எடுத்தெறிந்தும் உறுத்துகிற

முள்ளைப்போல

அடிமனத்துப் பரப்புக்குள்

அரிக்கிறது;நினைவில்லை;

நினைப்பென்று சொல்லும்

நிலையில்லை;பூர்வ ஜன்மம்;

அதன்முன்னால்,

அதற்கும் முன்னால்,

நினைத்துத் தொடராமல்

நிர்க்கதியாய் விட்டதொரு

கருத்துத் துணுக்கொன்று

கரிக்கிறது.

கண்டுமறந்த பழங்

கனவுக்குள் வந்திட்ட

காட்சியைப்போல்.

கசக்கிப் பிழிவதனால்

கண்டெடுக்க முடிவதில்லை.

வேதனைதான்.

நைந்தமனச் சிக்கெடுத்து

நினைவுக்கு நுனிகாண

முயல்கின்றேன்.

இயலவிலை.

வீண் அவஸ்தை.

Friday, 2 January 2026

 

விரஜா நதி

  விரஜா நதி.


உடற்கூட்டை விட்டெனது

உள்ளிருந்து ஏதொன்றோ

தடைகடந்து செல்கிறது!

சஞ்சாரம் தொடர்கிறது,

காரிருளின் உள்ளுக்குள்

காற்றிலொரு தூசியென.

வாரியெனை எடுத்து

வழி செலுத்தும் புதிரொன்று!

இருள்கண்டு அஞ்சுகையில்

இரு; கொஞ்சம் பொறு என்னும்.

இல்லாத கரம்கொண்டு

இங்கிதமாய் அணைத்தேகும்!

சற்றே தொடர்ந்தவுடன்

ஜாஜ்வல்யப் பெரு வெளிச்சம்!

கற்றைகளாய் வந்தென்னைக்

களிகூரச் சூழ்கிறது!


கரைகண்ணில் தெரியாத

கடல்போன்ற நதி முன்னே

என்னை நிறுத்தி வைத்து

இனிமையெனத் தான்பேசும்.

விரஜா நதியிதுதான்;

விரைந்ததனுள் மூழ்கிக்கொள்!

சிரஞ்சீவி என்றும் நீ!

சிறு மாற்றம் அவ்வளவே!

புதியதொரு நகர் ஏகிப்

புது வாழ்வு அமைத்துக்கொள்!

புன்மையெலாம் தீர்த்துக்கொள்!

புண்ணியங்கள் சேர்த்துக்கொள்!

“வாழி!” எனச் சொல்லி 

வந்தவிதம் தான் மறையும்!

***************************************************

நதிச் சுழிப்பில் மூழ்கிவிட

ஞாபகங்கள் தான் கரையும்!