வேள்வி
உமா-60கள்
நிற்க நிதானிக்க
நினைவென்னும் தவம் புரியச்
சற்றும் இடமில்லாச்
சந்தடியில் சிறுபொழுது.
பரபரப்பு மற்றுமொரு
பரபரபரப்பை விழுக்குமுனர்
பெருமூச்சாய்ச் சிந்தனையைப்
புரட்டிடவோர் அவகாசம்.
ஊணுறக்கம் சப்பென்ற
உத்தியோகம் நெறியென்றால்
மானுடத்துக் கென்னபயன்
மாபாவி வாழ்க்கையினால்?
ஒருகணம் இவ்வேதனைதான்
உலுக்கும்;மற்றோர் எண்ணம்
புரளும்;புது உற்சாகம்
பூரிப்புக் கரைகாணும்!
இன்பதுன்பச் சுவைமிக்க
இவ்வுலகப் பூரனத்தில்
என்பங்கோ கர்மமெனும்
ஏகாந்தப் பெருவேள்வி!
கவிஞர் திருலோக சீதாராம் இந்தக்கவிதையைத் தன் கணீர்க் குரலில் பாடிச் சிறப்பித்தது பெருமையுடன் நினைவுக்கு வருகிறது.
No comments:
Post a Comment