Sunday, 4 January 2026

வேள்வி

 வேள்வி

உமா-60கள்

நிற்க நிதானிக்க

நினைவென்னும் தவம் புரியச்

சற்றும் இடமில்லாச்

சந்தடியில் சிறுபொழுது.


பரபரப்பு  மற்றுமொரு

பரபரபரப்பை விழுக்குமுனர்

பெருமூச்சாய்ச் சிந்தனையைப்

புரட்டிடவோர் அவகாசம்.


ஊணுறக்கம் சப்பென்ற

உத்தியோகம் நெறியென்றால்

மானுடத்துக் கென்னபயன்

மாபாவி வாழ்க்கையினால்?


ஒருகணம் இவ்வேதனைதான்

உலுக்கும்;மற்றோர் எண்ணம்

புரளும்;புது உற்சாகம்

பூரிப்புக் கரைகாணும்!

இன்பதுன்பச் சுவைமிக்க 

இவ்வுலகப் பூரனத்தில்

என்பங்கோ கர்மமெனும் 

ஏகாந்தப் பெருவேள்வி! 

கவிஞர் திருலோக சீதாராம் இந்தக்கவிதையைத் தன் கணீர்க் குரலில் பாடிச் சிறப்பித்தது பெருமையுடன் நினைவுக்கு வருகிறது. 

No comments:

Post a Comment